காலஞ்சென்ற பாலுமகேந்திரா அவர்கள் தமிழ்நாட்டு மையசினிமாவில் நல்லசினிமாக்கள் என்று சொல்லக்கூடிய சில சினிமாக்களை இயக்கியவர், ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் அவரைப் போற்றிப் புகழும் விதம் மிகமிக அளவுக்கு மிஞ்சியதாகவே அவதானிக்க முடிந்தது. ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி பாலுமகேந்திராவின் தனிப்பட்ட வாழ்வில் அவருக்கும் மௌனிகாவிற்கும் இடையிலான உறவு, அவ் உறவு பற்றி பாலுமகேந்திராவும், மௌனிகாவும் வழங்கிய பேட்டிகள், பகிர்வுகள் போன்றன மீண்டும் மீண்டும் பகிரப்பட்டன. (பாலுமகேந்திராவின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள வந்த மௌனிகா இயக்குனர் பாலாவினால் தடுக்கப்பட்டமையும் இவ் உறவு மீண்டும் மீண்டும் பகிரப்படக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் மௌனிகா – பாலுமகேந்திரா உறவு பற்றிப் பேசிய பலருக்கு வசதியாக ஷோபா மறக்கப்பட்டவர் ஆனது ஒருவித செலக்ரிவ் அம்னீஷியா என்றே தோன்றுகின்றது. அது கூட பரவாயில்லை என்னும் அளவுக்கு, ஷோபாவுடனான அவரது உறவு குறித்து எழுந்த பல்வேறு விமர்சனங்களயும் தாண்டி அவரது ஷோபாவுடனான உறவை தெய்வீகக்காதல் என்று கொண்டாடுவோரைப் பார்க்கின்றபோது அதுவும் ஆனந்த விகடனுக்கு அவர் வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பட்ட, “அந்த வண்ணத்துப்பூச்சி எனது தோளிலும் சிறிதுகாலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்துபோன சோகத்தையா..?” என்ற வார்த்தைகளைக் கூறி உருகுகின்றபோது எனக்கு சில கேள்விகள் எழுகின்றன.
- அவரது அழியாத கோலங்கள் திரைப்படத்தின்போது ஷோபாவை உதவி / துணை இயக்குனர் என்று பெயரிட்டுக் காட்டி இருப்பார். அந்தத் திரைப்படத்தில் நடிக்கின்றபோது ஷோபாவுக்கு எத்தனை வயதிருக்கும்?. நிச்சயம் 16 வயதிலும் குறைவாகவே இருந்திருக்கும். அந்தளவு இளவயதினரை உதவி / துணை இயக்குனர் என்று; அதுவும் அந்தப் பட்டியலில் வந்த 3 பெயர்களில் முதன்மையானதாக பட்டியலிட்டது ஏன்? இதனை இயக்குனர் என்கிற அதிகாரம் கொண்டிருந்த பாலுமகேந்திரா அவர்கள் செய்த அதிகாரபீடத்தின் அலட்டல் என்றும் மிக மிகக் கேவலமான உள்நோக்கம் கொண்டதென்றுமே பார்க்க முடிகின்றது.
- மூடுபனி திரைப்படத்தின் ஆரம்பத்தில் வருகின்ற “எனக்கு எல்லாமுமாய் இருந்த அம்மு(ஷோபாவுக்கு) ஆத்ம சமர்ப்பனம்” என்கிற டைட்டில் கார்ட் பெரும் ஆயாசத்தைக் கிளப்பியது. மூடுபனி திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 வருடத்தின் பின் வெளியான அவர் மௌனிகாவுடனான தனது உறவை பகிரங்கமாக வெளிப்படுத்திய விகடன் பேட்டியிலோ அல்லது பின்னர் நிகழ்ந்த பல்வேறு சந்தர்ப்பங்களிலோ ஷோபாவை மனைவி என்று சொன்னது இல்லை. தேவதை என்றும்,, சிறுபிள்ளைத்தனமானவர் என்பதுவுமாகவே அவரது கருத்துப்பகிர்வு ஷோபா குறித்து நிகழ்ந்து இருக்கின்றது. தற்கொலைசெய்துகொண்ட ஷோபாவோ அல்லது தற்கொலை நோக்கித் தள்ளப்பட்டவர் என்றவகையில் கொலைசெய்யப்பட்ட ஷோபாவோ மாத்திரமல்லை, அவரது வாழ்க்கையில் துணைவியாகின்றபோது மௌனிகாவும் கூட 16 வயது அல்லது அதற்கு உட்பட்டவரே. இதனை ஆனந்த விகடனுக்கு வழங்கிய பேட்டியில் “இருபது வருடங்கள் தன்னுடைய எல்லாவற்றையும் எனக்காக அர்ப்பணித்துவிட்டு இப்போது 35 வயதாகும் மௌனியை எப்படி நான் தூக்கிப் போடுவது என்று அவரே கூறி இருக்கின்றார். பின்னர் பாலுமகேந்திராவின் இறப்பிற்குப் பின்னர் மௌனிகாவும் தமிழ் இந்துவிற்கு வழங்கிய பாலுமகேந்திரா குறித்து வழங்கிய நினைவுப் பகிர்வில் “1985ம் ஆண்டு வெளியான “உன் கண்ணில் நீர் வழிந்தால்” படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்ததன் மூலம் இயக்குனர் பாலுமகேந்திராவிற்கு அறிமுகமானேன். எங்கள் திருமணம் 2000ல் நடைபெற்றது. 28 வருட அன்பு சேர்ந்த வாழ்க்கை எங்களுடையது” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளார்/இயக்குநர் என்கிற அதிகாரத்தினை பயன்படுத்தி செய்ததாகவே கருதமுடிகின்றது. குறிப்பாக பாலுமகேந்திராவிற்கு மேற்குறிப்பிட்டவர்களுடன் இருந்த உறவுகள் பற்றிய ஓயாத புகழ்ச்சிகளே மீள மீள இவற்றை நினைவுறுத்துவனவாயும் இருக்கின்றன.
அதேநேரம் இந்தக் கட்டுரையின் ஆரம்பவசனத்தில் குறிப்பிட்டதுபோல ஒரு படைப்பாளியாக பாலுமகேந்திரா தமிழ்நாட்டு மையநீரோட்ட திரைப்படங்களில் நல்ல திரைப்படங்கள் என்று கூறக்கூடிய சில நல்ல திரைப்படங்களை இயக்கியவர். குறிப்பாக வீடு, சந்தியாராகம் மற்றும் அழியாதகோலங்கள். இவற்றில் சந்தியாராகமும், அழியாத கோலங்களும் எனக்கு மிகப் பிடித்த திரைப்படங்களும் கூட. எனினும் அவை மட்டுமல்லவே பாலுமகேந்திரா. அவர் சமரசமே செய்யாதவர் என்று எப்படிக் கூறுவது? மூன்றாம் பிறை, மறுபடியும் திரைப்படங்களில் கலைநேர்த்தியும், திருத்தமான இயக்கமும் இருந்தாலும், அவற்றில் வணிக நோக்கிற்காக திணிக்கப்பட்ட கவர்ச்சி பாடல்கள் அவர் செய்த சமரசம் தானே. அவர் விரும்பியோ, முழுமனதுடனோ செய்திருக்காவிட்டாலும் கூட!
பாலுமகேந்திராவின் மறைவிற்குப் பின்னர் அவர் இயக்கிய எல்லாத் திரைப்படங்களையும் அடுத்தடுத்துப் பார்த்தேன். (ரொரன்றோவில் இருக்கின்ற திரைப்பட சீடீக்கள் விற்கின்ற கடை ஒன்றில் அவரது மறைவின் பின்னர் சில வாரங்கள் “பாலுமகேந்திரா வாரம்” என்கிற பெயரில் தனியாக ஒரு பகுதியில் வைக்கப்பட்டு விற்கப்பட்டன) ரெட்டை வால் குருவி திரைப்படத்தை மறுபடியும் பாருங்கள். மிக மலினமான வணிகத் திரைப்படம். குறிப்பாக ஒரு மத்திய தர வர்க்க திருமணமான இளைஞன் ஒருவனின் பாலியல் விருப்புகளை/வேட்கைகளை அல்லது காமத்தை பேசுவது என்கிற விடயத்தைக் கையாண்ட திரைப்படம் என்றபோதும் அதனைக் காட்சிப்படுத்துவதில் மலினமான ரசனையைக் கையாண்டிருப்பார் பாலுமகேந்திரா. அதுபோலவே சதி லீலாவதியும், வண்ண வண்ணப்பூக்களும், ராமன் அப்துல்லாவும், அது ஒரு கனாக்காலமும் கூட. இவற்றை இங்கே குறிப்பிடுவது பாலுமகேந்திரா குறித்த எந்த காழ்ப்புணர்வினாலும் அல்ல, அவர் பற்றி தொடர்ச்சியாக கூறப்படும் அளவுக்கு மீறிய புகழுரைகள், அவர் பற்றிய எனது மதிப்பீட்டுடன் ஏற்படுத்திய சலனமே இந்தக் கட்டுரை.
பேசாமொழி இதழ் வீடு திரைப்பம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பாலுமகேந்திராவுடன் செய்த நேர்காணலில் பாலுமகேந்திராவிடம் “முழுக்க முழுக்க உங்கள் திருப்திக்காக எடுக்கப்பட்ட படமா வீடு?” என்கிற கேள்வியினைக் கேட்டிருப்பார்கள். அதற்கு பின்வருமாறு பதிலுரைத்திருப்பார் பாலுமகேந்திரா;
“என்னோட திருப்திக்கு என்பதைவிட, தமிழுக்கு இப்படியொரு படம் கண்டிப்பாக வேண்டும். I have my own way. எனக்கு சுதந்திரம் இருந்தால் இப்படியான திரைப்படங்களைத்தான் நான் எடுக்க விரும்புவேன். இப்படியான படங்களை எடுக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் சினிமாக்களைத்தாண்டி எனக்கும் குடும்பம் இருக்கின்றது. சினிமா என்பது என் கலாரீதியான வழிபாடு மட்டுமல்ல. என் தொழிலும் கூட. தொழில் என்கையில் அதில் வரும் வருவாயை வைத்துத்தான் நான் சாப்பிடவேண்டும். அதனால மத்த படங்களை சமரசங்களோடு பண்ண வேண்டிய வேலைக்கு நான் தள்ளப்படுகிறேன். (பேசாமொழி இதழ் 2, தை 15, 2013)“
பாலுமகேந்திரா கூறுகின்ற நியாயங்களும், காரணங்களும், சேர்ந்தே இருப்பது புலமையும், வறுமையும் என்பதைப் பெருமையுடன் சொல்லத் தலைப்படும் தமிழ்ச்சூழலில் என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்ற அதேவேளை அவர் பற்றி எழுப்பப்படும் மிகைப்படுத்திய விம்பங்கள் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. தன் தனிப்பட்ட வாழ்வின் பலவீனங்களுடன் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்த, நல்ல வாசகனாக இருந்து அவற்றின் பாதிப்பில் நல்ல சினிமாக்கள் சிலவற்றை இயக்கிய, தன் பெரும்பாலான படைப்புகளில் வணிகத்தை முன்னிறுத்தும் தமிழ் சினிமாவின் வியாபாரத் தேவைகளுக்கும் தன் தனிப்பட்ட கலை ரீதியான/அழகியல் ரீதியான தேர்வுகளுக்கும் இடையில் தடுமாறிய, தன் வழிவந்த / தன்னால் பயிற்றுவிக்கப்பட்ட / தன்னால் நெறிப்படுத்தப்பட்ட, தற்கால தமிழ் சினிமாவின் முக்கியமான சில இயக்குனர்களின் ஆசானாக இருந்த ஒரு கலைஞராகவே பாலுமகேந்திராவின் விம்பம் என்னில் எஞ்சி நிற்கின்றது
குறிப்பு: எனது நண்பன் விசாகனுடன் சென்ற ஆண்டின் இறுதிப் பகுதியிலும், பாலுமகேந்திராவின் மறைவிற்குப் பின்னும் அவர் பற்றிப் பேசியவற்றின் நினைவுகளில் இருந்து இப்பதிவு எழுதப்படுகின்றது.
இதை பாலுமகேந்திரா பற்றிய உங்கள் மதிப்பீட்டோடு சேர்ந்து நோக்குவதற்கான ஒரு இன்னொரு பார்வையாக எடுத்துக்கொள்ளுங்கள்:
அவர் பற்றி நீங்கள் வந்த முடிவுக்கு நான் நெருக்கமாகத்தான் நிற்கிறேன். அம் முடிவுக்கு நீங்கள் வந்த பாதையிலும் கோணத்திலுமிருந்து சற்று வேறுபட்ட ஒன்றையே நான் கொண்டிருக்கிறேன். இந்திய சினிமா பற்றிய எனக்கிருந்த பரீட்சிதமும், பாலுமகேந்திரா என்னுடன் கதைத்த விடயங்களும் இந்த மாறுபட்ட பார்வைக்கு காரணமாயிருக்கலாம்.
இந்தியாவில், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கற்பு நெறி, மத்திய வர்க்கத் தட்டில் மட்டும் பேணப்படும், பவித்திரமான ஒன்றாகக் கருதப்படும் ஒழுக்கமாகும். சட்டம் அதைச் சொல்லிக்கொண்டாலும், அதுபற்றிய பவித்திர உணர்வு மேல்தட்டு வர்க்த்திலும் இல்லை, கீழ்த்தட்டு வர்கத்திலுமில்லை. மத்தியதர வர்க்கத்தில்கூட மேல் தட்டு மத்தியதர வர்க்கத்தில் இந் நெறி சலனப்பட்ட நிலையிலேயே ஊசலாடுகிறது. இந்திய சினமா உலகிலோ, கட்டற்ற வகையில் இந்த நெறி குலைந்துபோயுள்ளது. ஆனால், உள்ளே இப்படி வாழ்ந்துகொண்டிருந்தாலும் இதை வெளிப்படையாக இவர்கள் நியாயப்படுத்துவதில்லை. மத்தியதர வர்க்த்தை நம்பி எடுக்கப்படும் எம் தமிழ் சினிமாவும் இந்தப் போலித்தனத்தையே காண்பித்துக்கொண்டிருக்கிறது. இதன் தாக்கத்தாலேயே பாலுமகேந்திராவிடமும் இத்தகைய எதிர்பார்ப்பு – ஏமாற்றம் எமக்கு ஏற்படுகிறது. ஆனால் நாம் எம்.ஜி.ஆரின் பகிரங்கமான தனிப்பட்ட வாழ்க்கையில் பல பெண்களுடனான தொடர்புகள் பற்றியும் ஏன் கருணாநிதியின் பல மனைவிமாருடனான வாழ்க்கை பற்றியும், இன்னும் பல சினிமா நடிக நடிகைகளின் கிசுகிசுக்கள் பற்றியும் அறிந்துகொண்டே, இந்த எதிர்ப்பாப்பையும் கொண்டிருக்கிறோம்.
நான் சிறிதுகாலம் இந்திய சினிமாப் பட்டறையில் பெற்ற அனுபவத்தைச் சொல்கிறேன். ஒரு பெண் ஒரு ஆணுடன் சோடியாக சில காலம் திரிவார். இன்னொரு சோடி வேறொரு புறத்தில் திரியும். சிலகாலத்தின் பின் முதற் சோடியிலிருந்த பெண் இரண்டாம் சோடியிலிருந்த ஆணுடன் திரிவார். அந்த ஆணுடன் முன்னர் திரிந்த பெண், இப்போது திரியும் பெண்ணைப்பார்த்து, ‘என்ஜோய் யுவர் செல்ஃப்’ என்று வாழ்த்திவிட்டுச் செல்வார்.இதைப் பார்த்தபோது, எனக்கு ஆதிப் பொதுவுடமைச் சமுதாயம் ஞபகம் வந்தது. ஆனால், இவர்கள் இந்த உறவை ‘கொம்பனி கொடுத்தல்’ என்று சாதாரணமாகக் கூறிக்கொள்வார்கள்.
இப்படிப்பட்ட ஒரு உலகுக்குள் இலங்கை போன்ற, மத்தியதரவர்க்க கருத்தாளுமைக்குள் வளர்ந்த ‘நேர்த்தியான மனிதன்’ என்ற பார்வையை சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கிற ஒருவன் – அதுவும் ஒரு கலைஞன், வீழ்கின்றபோது, தடுமாறுவதும், அத் தடுமாற்றங்களின் வழியே இழுபட்டுக்கொண்டே அது தப்பு என்று குற்ற உணர்வில் பொசுங்குவதும், மீண்டும் அந்த ‘நேர்த்தியான மனிதன்’ பட்டத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் ஆதங்கத்தில் தன்னை நியாப்படுத்த முனைந்து, வகையறியாமல் விடயங்களை ஒப்புவித்து சிக்கலுக்குள்ளாகிவிடுவதும் நிகழ்கின்றது. ஆனாலும் இச் செயல்களுக்கும் அவனுக்குள் இருக்கும் மனசாட்சியே காரணமாக இருக்கிறது. இது ஏனய சினிமாக்காரர்களிடம் இருப்பதில்லை என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும். அவர்கள் இவ் விடயத்தில் எவ்வளவோ பெரிய மாதாக்களாக பழம் தின்று கொட்டை போட்டுவிட்டு, சர்வ சாதாரணமா உதறிப்போட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள் – எந்த மன உறுத்தலுமில்லாமல். அவர்கள் மீதெல்லாம் எம் காட்டமான விமர்சனம் பாய்வதில்லை- மாறாக, நாம் இவற்றை அவர்களின் பெருமைகளாக எடுத்துச் சொல்வோம். இன்று எமக்கு சேகுவராவின் தனிப்பட்ட வாழ்க்கை தெரிந்தால் நாம் அவரை உன்னத போராளியில்லை என்று உதறிவிடுவோமா, இல்லை கார்ல் மார்க்ஸின் வேலைக்காரியுடர்பான தொடர்பை வைத்து அவரின் மூலதனப் புத்தகத்தையும் உபரிமதிப்புத் தத்ததுவத்தையும் இயக்கவியல் பொருள்முதல் வாதத்துடன் கூட்டியள்ளிக் குப்பைத்தொட்டிக்குள் எறிந்து விடுவோமா? மாஓ வின் ஒன்பது மனைவிமார் சீனப் புரட்சிக்கு களங்கம் விளைவித்தார்களென்று சாடினோமா? இன்றும் எம்ஜிஆர் பக்தர்களுக்கெல்லாம் அவரது சினிமா வாழ்க்கை தெரியாதா என்ன? இன்று ஜெயலலிதாவை அவர்கள் எம்ஜியாரின் உறவுப் பாலத்தூடாகத்தானே தலைவியாக்கினார்கள். ஆனால், பாலுமகேந்திராவை மட்டும் நாம் பிடித்து சாத்து சாத்தென்று சாத்த நினைக்கிறோம் – நாமே மனதுக்குள் சினிமா நடிகைகளுக்கு எச்சிலூறிக்கெண்டு. உண்மையில் இவ் விவகாரங்களை அவரே பெருதுபடுத்திவிட, அதை எடுத்து நாம் இன்னும் ஊதிப் பெருக்கவைத்து வெடிக்க வைக்க நிற்கிறோம். ஒன்றும் வேண்டாம். நீங்களே கொஞ்சம் காசைப் புரட்டிக்கொண்டு, ஒரு படமெடுக்கப் போவதாக சென்னையில் போய் இறங்குங்கள். வண்ணத்துப் பூச்சிகளின் வலைக்குள் விழுந்து காசைத் தொலைத்துவிட்டு வெறும் கையோடு வந்து வாயைப் பொத்திக்கொண்டு சுருண்டு படுத்துவிட்ட பலரின் கதைகளை நீங்களும் அடிபட்ட பின்னர்தான் ஒவ்வொன்றாய் அறிவீர்கள். ஆக, பாலுமகேந்திரா தப்பேதும் பண்ணவில்லை என்று நான் சொல்லவில்லை. அவர் பண்ணியது அங்கு நிகழ்பவற்றை மீறிய தப்பாகத் தெரியவில்லை என்பதையே சொல்கிறேன். 16 வயதில் பெண் நடிகை விரல் சூப்பிக்கொண்டு பால் மணம் மாறாதவளாக சினிமாக்கு வருவதில்லை. சினிமாவிற்குள் புகமுன்னரே அதன் அந்தரங்கங்களை தெரிந்துகொண்டு, அதற்குத் தயாரக, ஒரு லாப நட்டக் கணக்குப் பார்த்துவிட்டே வருகிறாள். அங்கு டைரக்டரின் அதிகாரம் மட்டுமல்ல, கெமராமேனின் அங்கீகாரம் முதற்கொண்டு சகலதுக்கும் வளைந்து கொடுக்க வேண்டுமென்ற புரிதலோடுதான் வருகிறாள். அப்படி வளையாவிட்டால் சினிமா அவளைக் கடாசி வீசிவிடும். (பெரும் புள்ளிகளின் உறவினர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.) அவளில்லாவிட்டால் ஆயிரம்பேர் வரிசையில் நிற்கிறார்கள் எதற்கும் தயாராக. அவர்கள் இந்தப் பாதையினூடாகத்தான் செல்ல வேண்டுமென்பது, அவர்களுக்கும், அவர்களை அனுப்பிவைக்கும் பெற்றோர்களுக்கும்கூட நன்கு தெரியும். அவர்களுக்கு பாதை முக்கியமல்ல, சேரப்போகும் இடம்தான் முக்கியம். அங்கு சேர்ந்துவிட்டபின், பாதை பற்றி யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. நீங்களே ஓட்டோகிறாஃப் வாங்க முண்டியடித்துக்கொண்டு நிற்பீர்கள். ஆனால், சாதாரண வாழ்வில் யாவரும் பணக்காரராய் வர ஆசைப்பட்டு, முதலிட்டு, மண் கவ்விக்கொள்வதைப்போல, இங்கும் நடக்கும். வீழ்ந்தவர் பற்றி யாரும் பேசப்போவதில்லை. அவர்கள்கூடப் பேச மாட்டார்கள். (என்னுடன் பயிற்சிபெற்ற ஒரு சக நடிகையிடம், நானும் அப்பாவித் தனமாக, தமிழ்ச் சினிமா உலகில் பெண்ணொடுக்குமுறை பற்றிக் கேட்டேன். உடனேயே அவர், இதை விடுத்து வேறு எதையாவது பேசுவோமா என்றுவிட்டார்.)
இதுதவிர பாலுமகேந்திராவின் படைப்புகள் பற்றிய உங்கள் விமர்சனம் சரி. அவர் என்னிடம் கதைத்தபோது, கலைப் படத்துக்கும் வர்த்தகப் படத்துக்கும் இடையே, வர்தகக்-கலைப்படம் என்ற ஒரு வகையை உருவாக்க முனைவதாகச் சொன்னார். ஆனால் அவற்றில் பல வர்தக அம்சம் கலந்த கலைப்படங்களாகவும், சில கலையம்சம் கொண்ட வர்த்தகப் படங்களாகவும், கண்ணே கண்ணென்று இரண்டே இரண்டு கலைப் படங்களுடன் முடிவுற்றதைத்தான் கண்டேன். மேலும் பல ஆங்கிலப் படத் தழுவல்களும் தாக்கங்களும் இவரது படைப்புகளின் சுயத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பதையும் பார்க்கிறேன். இவர் மிகச் சிறந்த ஒரு கெமராமென் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சில படைப்புகளில் மட்டும் தன் இயக்குநருக்கான ஆழுமையையை நிரூபிக்கச் செய்தது மட்டுமன்றி, தமிழ் சினிமாவை விஞ்சிநிற்கவும் செய்திருக்கிறார். ஆனால் என்னுடன் அவர் பேசிய அந்த வர்தகக்-கலைப் படம் பற்றிய அவரது பரீட்சிதங்கள் வெற்றிபெறவில்லையென்றே எண்ணுகிறேன். இதற்கு அவர் குற்ற உணர்வின்பால் ஆழ்ந்துபோன வாழ்க்கைச் சிக்கலும் பங்கு வகித்திருக்கிறது. இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
LikeLike
இதை பாலுமகேந்திரா பற்றிய உங்கள் மதிப்பீட்டோடு சேர்ந்து நோக்குவதற்கான ஒரு இன்னொரு பார்வையாக எடுத்துக்கொள்ளுங்கள்:
அவர் பற்றி நீங்கள் வந்த முடிவுக்கு நான் நெருக்கமாகத்தான் நிற்கிறேன். அம் முடிவுக்கு நீங்கள் வந்த பாதையிலும் கோணத்திலுமிருந்து சற்று வேறுபட்ட ஒன்றையே நான் கொண்டிருக்கிறேன். இந்திய சினிமா பற்றிய எனக்கிருந்த பரீட்சிதமும், பாலுமகேந்திரா என்னுடன் கதைத்த விடயங்களும் இந்த மாறுபட்ட பார்வைக்கு காரணமாயிருக்கலாம்.
இந்தியாவில், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கற்பு நெறி, மத்திய வர்க்கத் தட்டில் மட்டும் பேணப்படும், பவித்திரமான ஒன்றாகக் கருதப்படும் ஒழுக்கமாகும். சட்டம் அதைச் சொல்லிக்கொண்டாலும், அதுபற்றிய பவித்திர உணர்வு மேல்தட்டு வர்க்த்திலும் இல்லை, கீழ்த்தட்டு வர்கத்திலுமில்லை. மத்தியதர வர்க்கத்தில்கூட மேல் தட்டு மத்தியதர வர்க்கத்தில் இந் நெறி சலனப்பட்ட நிலையிலேயே ஊசலாடுகிறது. இந்திய சினமா உலகிலோ, கட்டற்ற வகையில் இந்த நெறி குலைந்துபோயுள்ளது. ஆனால், உள்ளே இப்படி வாழ்ந்துகொண்டிருந்தாலும் இதை வெளிப்படையாக இவர்கள் நியாயப்படுத்துவதில்லை. மத்தியதர வர்க்த்தை நம்பி எடுக்கப்படும் எம் தமிழ் சினிமாவும் இந்தப் போலித்தனத்தையே காண்பித்துக்கொண்டிருக்கிறது. இதன் தாக்கத்தாலேயே பாலுமகேந்திராவிடமும் இத்தகைய எதிர்பார்ப்பு – ஏமாற்றம் எமக்கு ஏற்படுகிறது. ஆனால் நாம் எம்.ஜி.ஆரின் பகிரங்கமான தனிப்பட்ட வாழ்க்கையில் பல பெண்களுடனான தொடர்புகள் பற்றியும் ஏன் கருணாநிதியின் பல மனைவிமாருடனான வாழ்க்கை பற்றியும், இன்னும் பல சினிமா நடிக நடிகைகளின் கிசுகிசுக்கள் பற்றியும் அறிந்துகொண்டே, இந்த எதிர்ப்பாப்பையும் கொண்டிருக்கிறோம்.
நான் சிறிதுகாலம் இந்திய சினிமாப் பட்டறையில் பெற்ற அனுபவத்தைச் சொல்கிறேன். ஒரு பெண் ஒரு ஆணுடன் சோடியாக சில காலம் திரிவார். இன்னொரு சோடி வேறொரு புறத்தில் திரியும். சிலகாலத்தின் பின் முதற் சோடியிலிருந்த பெண் இரண்டாம் சோடியிலிருந்த ஆணுடன் திரிவார். அந்த ஆணுடன் முன்னர் திரிந்த பெண், இப்போது திரியும் பெண்ணைப்பார்த்து, ‘என்ஜோய் யுவர் செல்ஃப்’ என்று வாழ்த்திவிட்டுச் செல்வார்.இதைப் பார்த்தபோது, எனக்கு ஆதிப் பொதுவுடமைச் சமுதாயம் ஞபகம் வந்தது. ஆனால், இவர்கள் இந்த உறவை ‘கொம்பனி கொடுத்தல்’ என்று சாதாரணமாகக் கூறிக்கொள்வார்கள்.
இப்படிப்பட்ட ஒரு உலகுக்குள் இலங்கை போன்ற, மத்தியதரவர்க்க கருத்தாளுமைக்குள் வளர்ந்த ‘நேர்த்தியான மனிதன்’ என்ற பார்வையை சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கிற ஒருவன் – அதுவும் ஒரு கலைஞன், வீழ்கின்றபோது, தடுமாறுவதும், அத் தடுமாற்றங்களின் வழியே இழுபட்டுக்கொண்டே அது தப்பு என்று குற்ற உணர்வில் பொசுங்குவதும், மீண்டும் அந்த ‘நேர்த்தியான மனிதன்’ பட்டத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் ஆதங்கத்தில் தன்னை நியாப்படுத்த முனைந்து, வகையறியாமல் விடயங்களை ஒப்புவித்து சிக்கலுக்குள்ளாகிவிடுவதும் நிகழ்கின்றது. ஆனாலும் இச் செயல்களுக்கும் அவனுக்குள் இருக்கும் மனசாட்சியே காரணமாக இருக்கிறது. இது ஏனய சினிமாக்காரர்களிடம் இருப்பதில்லை என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும். அவர்கள் இவ் விடயத்தில் எவ்வளவோ பெரிய மாதாக்களாக பழம் தின்று கொட்டை போட்டுவிட்டு, சர்வ சாதாரணமா உதறிப்போட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள் – எந்த மன உறுத்தலுமில்லாமல். அவர்கள் மீதெல்லாம் எம் காட்டமான விமர்சனம் பாய்வதில்லை- மாறாக, நாம் இவற்றை அவர்களின் பெருமைகளாக எடுத்துச் சொல்வோம். இன்று எமக்கு சேகுவராவின் தனிப்பட்ட வாழ்க்கை தெரிந்தால் நாம் அவரை உன்னத போராளியில்லை என்று உதறிவிடுவோமா, இல்லை கார்ல் மார்க்ஸின் வேலைக்காரியுடர்பான தொடர்பை வைத்து அவரின் மூலதனப் புத்தகத்தையும் உபரிமதிப்புத் தத்ததுவத்தையும் இயக்கவியல் பொருள்முதல் வாதத்துடன் கூட்டியள்ளிக் குப்பைத்தொட்டிக்குள் எறிந்து விடுவோமா? மாஓ வின் ஒன்பது மனைவிமார் சீனப் புரட்சிக்கு களங்கம் விளைவித்தார்களென்று சாடினோமா? இன்றும் எம்ஜிஆர் பக்தர்களுக்கெல்லாம் அவரது சினிமா வாழ்க்கை தெரியாதா என்ன? இன்று ஜெயலலிதாவை அவர்கள் எம்ஜியாரின் உறவுப் பாலத்தூடாகத்தானே தலைவியாக்கினார்கள். ஆனால், பாலுமகேந்திராவை மட்டும் நாம் பிடித்து சாத்து சாத்தென்று சாத்த நினைக்கிறோம் – நாமே மனதுக்குள் சினிமா நடிகைகளுக்கு எச்சிலூறிக்கெண்டு. உண்மையில் இவ் விவகாரங்களை அவரே பெருதுபடுத்திவிட, அதை எடுத்து நாம் இன்னும் ஊதிப் பெருக்கவைத்து வெடிக்க வைக்க நிற்கிறோம். ஒன்றும் வேண்டாம். நீங்களே கொஞ்சம் காசைப் புரட்டிக்கொண்டு, ஒரு படமெடுக்கப் போவதாக சென்னையில் போய் இறங்குங்கள். வண்ணத்துப் பூச்சிகளின் வலைக்குள் விழுந்து காசைத் தொலைத்துவிட்டு வெறும் கையோடு வந்து வாயைப் பொத்திக்கொண்டு சுருண்டு படுத்துவிட்ட பலரின் கதைகளை நீங்களும் அடிபட்ட பின்னர்தான் ஒவ்வொன்றாய் அறிவீர்கள். ஆக, பாலுமகேந்திரா தப்பேதும் பண்ணவில்லை என்று நான் சொல்லவில்லை. அவர் பண்ணியது அங்கு நிகழ்பவற்றை மீறிய தப்பாகத் தெரியவில்லை என்பதையே சொல்கிறேன். 16 வயதில் பெண் நடிகை விரல் சூப்பிக்கொண்டு பால் மணம் மாறாதவளாக சினிமாக்கு வருவதில்லை. சினிமாவிற்குள் புகமுன்னரே அதன் அந்தரங்கங்களை தெரிந்துகொண்டு, அதற்குத் தயாரக, ஒரு லாப நட்டக் கணக்குப் பார்த்துவிட்டே வருகிறாள். அங்கு டைரக்டரின் அதிகாரம் மட்டுமல்ல, கெமராமேனின் அங்கீகாரம் முதற்கொண்டு சகலதுக்கும் வளைந்து கொடுக்க வேண்டுமென்ற புரிதலோடுதான் வருகிறாள். அப்படி வளையாவிட்டால் சினிமா அவளைக் கடாசி வீசிவிடும். (பெரும் புள்ளிகளின் உறவினர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.) அவளில்லாவிட்டால் ஆயிரம்பேர் வரிசையில் நிற்கிறார்கள் எதற்கும் தயாராக. அவர்கள் இந்தப் பாதையினூடாகத்தான் செல்ல வேண்டுமென்பது, அவர்களுக்கும், அவர்களை அனுப்பிவைக்கும் பெற்றோர்களுக்கும்கூட நன்கு தெரியும். அவர்களுக்கு பாதை முக்கியமல்ல, சேரப்போகும் இடம்தான் முக்கியம். அங்கு சேர்ந்துவிட்டபின், பாதை பற்றி யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. நீங்களே ஓட்டோகிறாஃப் வாங்க முண்டியடித்துக்கொண்டு நிற்பீர்கள். ஆனால், சாதாரண வாழ்வில் யாவரும் பணக்காரராய் வர ஆசைப்பட்டு, முதலிட்டு, மண் கவ்விக்கொள்வதைப்போல, இங்கும் நடக்கும். வீழ்ந்தவர் பற்றி யாரும் பேசப்போவதில்லை. அவர்கள்கூடப் பேச மாட்டார்கள். (என்னுடன் பயிற்சிபெற்ற ஒரு சக நடிகையிடம், நானும் அப்பாவித் தனமாக, தமிழ்ச் சினிமா உலகில் பெண்ணொடுக்குமுறை பற்றிக் கேட்டேன். உடனேயே அவர், இதை விடுத்து வேறு எதையாவது பேசுவோமா என்றுவிட்டார்.)
இதுதவிர பாலுமகேந்திராவின் படைப்புகள் பற்றிய உங்கள் விமர்சனம் சரி. அவர் என்னிடம் கதைத்தபோது, கலைப் படத்துக்கும் வர்த்தகப் படத்துக்கும் இடையே, வர்தகக்-கலைப்படம் என்ற ஒரு வகையை உருவாக்க முனைவதாகச் சொன்னார். ஆனால் அவற்றில் பல வர்தக அம்சம் கலந்த கலைப்படங்களாகவும், சில கலையம்சம் கொண்ட வர்த்தகப் படங்களாகவும், கண்ணே கண்ணென்று இரண்டே இரண்டு கலைப் படங்களுடன் முடிவுற்றதைத்தான் கண்டேன். மேலும் பல ஆங்கிலப் படத் தழுவல்களும் தாக்கங்களும் இவரது படைப்புகளின் சுயத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பதையும் பார்க்கிறேன். இவர் மிகச் சிறந்த ஒரு கெமராமென் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சில படைப்புகளில் மட்டும் தன் இயக்குநருக்கான ஆழுமையையை நிரூபிக்கச் செய்தது மட்டுமன்றி, தமிழ் சினிமாவை விஞ்சிநிற்கவும் செய்திருக்கிறார். ஆனால் என்னுடன் அவர் பேசிய அந்த வர்தகக்-கலைப் படம் பற்றிய அவரது பரீட்சிதங்கள் வெற்றிபெறவில்லையென்றே எண்ணுகிறேன். இதற்கு அவர் குற்ற உணர்வின்பால் ஆழ்ந்துபோன வாழ்க்கைச் சிக்கலும் பங்கு வகித்திருக்கிறது. இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
LikeLike
LikeLike