புரூஸ் மக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட ஸ்கந்தா நவரட்ணம், கிருஷ்ணகுமார் கனகரட்ணம் உள்ளிட்ட எட்டுப் பேர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிகள் சென்ற வாரம் ரொரன்றோவில் இரண்டு இடங்களில் நடைபெற்றிருந்தன. இவற்றில் வெள்ளிக்கிழமை ஸ்கார்பறோ சிவிக் சென்ரரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன். இந்நிகழ்வினை தமிழ்த்தாய் மன்றம் நாடு கடந்த தமிழீழ அரசு கனடியத் தமிழர் தேசிய அவை தமிழர் வகை துறை வள நிலையம் (தேடகம்) Alliance for South Asian Aids Prevention கனடிய நயினாதீவு அபிவிருத்திச் சங்கம் கந்தமுருகேசனார்... Continue Reading →
லண்டன்காரர்: அறிமுக உரை
ஈழத்து இலக்கியம், ஈழத்தவர் அடையாளம், அவர்கள் வாழ்வியல் பற்றிய கேள்விகளும் உரையாடல்களும் பெருமளவில் அண்மைக்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அண்மைக்காலமாக ஈழத்தவர்களது நாவல்களாகவும், குறுநாவல்களாகவும் பல்வேறு வெளியீடுகளையும் வாசிக்கக் கிடைத்திருக்கின்றது. இவற்றின் பொதுத்தன்மையை எடுத்துக்கொண்டால் இவற்றில் பெரும்பாலனவை ஈழப்போரின் பிந்தைய காலகட்டங்களில் வெளியானவை, ஓரளவு சுய அனுபவக் குறிப்புகளை உள்வாங்கியவை. அது தவறானதும் அல்ல. கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான அரசியல் குழப்பங்களும், இடது சாரிய புரட்சிகர நடவடிக்கைகளிற்கான முயற்சிகளும், சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூகப் போராட்டங்களும் 30... Continue Reading →
C-51 குடியுரிமையையும் சுதந்திரத்தையும் பறிக்கிறது -ராதிகா சிற்சபைஈசன்
கனடாவைப் பொறுத்தவரை நாம் பார்த்தால் கனடிய மைய நீரோட்ட அரசியலில் ஈடுபடும் தமிழர்களில் அனேகம் பேர் இலங்கையில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்று கனடாவிற்கு தமது மத்திம வயதுகளில் வந்தவர்கள். இந்த இடத்தில் நீங்கள் மிகச் சிறிய வயதில் கனடாவிற்கு வந்திருக்கின்றீர்கள். இலங்கை போன்ற ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் கூர்மை பெற்றிருக்கின்றபோது அங்கு அரசியல் ஆர்வம் வருவதற்கான காரணமும், உந்துதலும் வேறு. உங்களது நிலைமையில் அது வேறு. மையநீரோட்ட அல்லது நாடாளுமன்ற அரசியல் தொடர்பான உங்கள்... Continue Reading →
குறும்படப் பயிற்சிப் பட்டறை : சர்க்கரைப் பந்தலிற் தேன்மழை
ஈழத்தமிழர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக உணர்வது போல தமக்கான தனியான பண்பாட்டு வெளிப்பாடுகளையும் பேணவேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. துரதிஸ்டவசமாக, பெரும்பாலும் நாம் எம்மை தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களுடன் கலந்தே அடையாளப்படுத்தி வருகின்றோம். இது எமக்கான தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை அழித்துவிடுவதுடன், தேச உருவாக்கத்திலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது. எளிய உதாரணமாக, புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற திருமண விழாக்கள் போன்ற சடங்குகளில் தமிழகத்து, வட இந்திய பாணியினது செல்வாக்குகள் அதிகரித்து வருவதை அவதானிக்கலாம். தவிர, புலம்பெயர்... Continue Reading →
ரொரன்றோ தமிழ்ச் சங்கம் | ரொரன்றோ பொது நூலகம் | வைரமுத்து – குமுதம் கார்ப்பரேட் வியாபாரம்
ரொரன்றோ தமிழ் சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் சார்பில் ஒழுங்கு செய்யப்படும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்களில் இயன்றவரை கலந்துகொள்ளுகின்றேன். ஒவ்வொரு மாதமும் இறுதிச் சனிக்கிழமை மாலை என்று ஒரு குறித்த தினத்தில் நிகழ்வுகள் தொடர்ச்சியாக திட்டமிட்டு நடத்தப்படுவது முக்கியமானது. அதுபோல ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு மையப் பொருள் தேர்வு செய்யப்பட்டு, அது பற்றிய ஒரு விரிவான கட்டுரை வாசிப்பு ஒன்றும், பின்னர் அதை ஒட்டிய துணைத் தலைப்புகளிலான கட்டுரை வாசிப்புகளுமாக நிகழ்வு நடைபெற்று வருகின்றது. இறுதியாக ஐயந்தெளிதல்... Continue Reading →
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
மரணம் மனிதர்களை மறக்கச்செய்துவிடுகின்றது, மகா மனிதர்களை மனதில் நிலைக்கச்செய்துவிடுகின்றது. பழகியவர்களைக் கூட மரணத்தின்பின்னர் மறந்துசெல்கின்ற இன்றைய காலத்தில், இலேசான அறிமுகம் மாத்திரம் உள்ள ஒருவரை மரணத்தின் பின்னர் அறிந்து, அவர் பற்றி மதிப்புற்று, இன்னும் இன்னும் தேடி அறிந்து அதிசயிப்பது என்பது அரிதாகவே நிகழ்கின்றது. அப்படி ஒருவர் பவன் என்று பலராலும் அறியப்பட்ட சத்தியபவன் சத்தியசீலன் அவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் சிலர் இணைந்து இலக்கிய நிகழ்வொன்றை ஒழுங்குசெய்திருந்தோம். எம் அனைவருக்கும் அது முதன்முயற்சி.... Continue Reading →
Rob Ford மற்றும் Kristyn Wong-Tam கற்கவேண்டிய பாடங்கள்
ரொரன்றோ மேயர் Rob Ford ன் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிப்பது நல்லது. இப்படி ஒருவர் எப்படி மேயரானார் என்கிற கேள்வியே தொடந்து எழுகின்றது. 2008 ல் இவர் கவுன்சிலராக இருந்த போது “Those Oriental people work like dogs. … They’re slowly taking over என்றும் they even sleep beside machines என்றும் கூறியிருந்தார். அப்போது இதற்கான த்மது எதிர்ப்பைக் காட்டும் போராட்டம் ஒன்றை ஒருங்கிணைத்தவர் ஆன Krystyn Wang-Tam அதன் பின்னர் தானும்... Continue Reading →
தொலைத்த எம்மை மீட்டல்
சென்ற ஞாயிற்றுக் கிழமை ரொரன்ரோ ஸ்ரார் பத்திரிகையின் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற Drinking in the Basement என்கிற Samantha Craggs எழுதிய சிறுகதை ஒன்றை யதேச்சையாகப் படித்தேன். பெரியளவில் சிலாகித்துச் சொல்ல முடியாத கதையென்றாலும் அந்தக் கதையில் வருகின்றது போன்ற வாழ்க்கை முறைகளைப் பல இடங்களிலும் பார்திருக்கின்றேன். போதை, பொருப்பின்மை, சிதையும் நம்பிக்கைகல் பற்றிக் கதை பேசுகின்றது. மதுபானப் பாவனைக்கு நான் ஒரு போதும் எதிர்க்குரல் எழுப்புவதில்லை. ஆனால் தம்மைத் தாமே வாழ்க்கையை... Continue Reading →
புலம்பெயர் நாடுகளின் அரசியலும், புலம்பெயர் தமிழர்களும்: செய்யவேண்டியது என்ன
கனேடிய பாராளுமன்றத் தேர்தல்கள் நிறைவுபெற்று ஹார்பர் தலைமையின் கீழான வலதுசாரி பழமைவாதக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியக் கைப்பற்றி இருக்கின்றது. அதே நேரம் புதிய ஜன நாயகக் கட்சி (NDP) கனேடியப் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக இரண்டாவது அதிக இருக்கைகளைக் கைப்பற்றி, உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியாக தெரிவாகியுள்ளது. தொடர்ச்சியாக NDP கட்சியை அவதானித்துவந்ததன் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் எனது விருப்பத்துக்குரிய கட்சியாகவும் NDPயினரே இருந்துவந்துள்ளனர். இதுவரை காலமும் நிறைய இடங்களில் என்டிபி கட்சியனர் பற்றிக் கூறியபோதெல்லாம்,... Continue Reading →
கனேடியத் தேர்தல்களும் தமிழ்விண்ணின் தில்லாலங்கடிகளும் மற்றும் ராகவன் பரஞ்சோதி
கனேடியத் தேர்தல்கள் சூடுபிடித்திருக்கின்ற இந்த நிலையில் ஏற்கனவே ஒரு முறை தமிழ் விண் (tamilwin.com) இந்தத் தேர்தல்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் செய்து வருகின்ற தகிடுதித்தங்கள் பற்றி முன்பொருமுறை முகப் பகக்த்தில் நண்பர்களுடன் நடைபெற்ற உரையாடல் ஒன்றில் கவனப்படுத்தி இருந்தேன். இன்று காலை மீண்டும் ஒரு முறை தமிழ் விண் தன் சாமர்த்தியத்தை / தகிடுதித்தத்தைக் காட்டியுள்ளது. நேற்று மாலை கனேடியத் தமிழ் பேரவையும், சீன கனேடிய தேசிய கவுன்சிலும் அனைத்துக் கட்சி வேட்பாளர் விவாதம் ஒன்றுக்கு... Continue Reading →