மணற்கேணி இதழும் சில எண்ணங்களும்

நிறப்பிரிகை ரவிக்குமார் ஆசிரியராக இருக்கின்ற மணற்கேணி இதழின் முதல் இரண்டு இதழ்களை பெற்றுக்கொண்டேன்.  இதழ்களை புரட்டிப் பார்த்தவுடனேயே மனதில் தோன்றிய விடயம், அவற்றின் அச்சு நேர்த்தி.  தமிழ்ச் சிற்றிதழ்களின் அச்சு நேர்த்தி பற்றிய பேச்சுகள் எழும்போதெல்லாம் பரந்தாமனின் அஃக் இதழ் பற்றியே சிலாகிக்கப்படும்.  துரதிஸ்டவசமாக எனக்கு அந்த இதழ்களில் ஒன்றையேனும் பார்க்கக் கிடைக்கவில்லை என்றாலும் தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் அச்சு நேர்த்தி, ஒரு/ழுங்கமைப்பு போன்ற விடயங்களில் காட்டப்படும் சிரத்தையின்மை பற்றி நிச்சயமாக அங்கலாய்ப்பு இருக்கின்றது.  மணற்கேணி இதழ்களைப்... Continue Reading →

பாரதி பாடல்களுக்குத் தடை புத்தகம் பற்றிய சில பகிர்தல்கள்

"சென்னை அரசாங்கம் சுயமாகத் தீர்மானிக்கும் ஆற்றல் முற்றிலும் தனக்குக் கிடையாது என்பதை இந்த விஷயத்தின் மூலம் வெளிக்காட்டி விட்டது. தமிழ் படிக்கும் மக்கள் நேரடியாக இகழ்ந்து அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதை அவர்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். இந்த அரசாங்கம் மக்கள் கருத்துக்களுக்கு ஏதேனும் மதிப்புக் கொடுக்கிறது என்றால், இந்த நடவடிக்கையை அது மறுபரிசீலனை செய்யவேண்டும். தென்னிந்திய மக்களின் தேசிய உணர்வினை இந்த நடவடிக்கையின் மூலம் தடுத்து நிறுத்திவிடமுடியும் என எண்ணினால் அவர்கள் கருத்து முற்றிலும் தவறானது". இந்த வரிகளைப் பார்த்ததும்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: