இன்றைய கல்வி முறைகள், பாடசாலைகளின் நிலைமைகள், அவை எதிர்கொள்ளும் சவால்கள், மாணவர் - ஆசிரியர் உறவு நிலை என்பன குறித்து நண்பர்களுடன் உரையாடுவதும் அவை பற்றி வாசிப்பதும் எனக்கு விருப்பமான ஒன்று, அத்தகைய உரையாடல்கள் எப்போதும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் கல்விகற்ற காலப்பகுதியில் அதிபராக இருந்த அ. பஞ்சலிங்கம் அவர்களைப் பற்றிப் பெருமதிப்புடன் நினைந்து போற்றுவதுடன் நிறைவுறுவது வழக்கம். 1991 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராக பஞ்சலிங்கம் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட காலப்பகுதியானது அரசியல்... Continue Reading →
கையெழுத்துப் பிரதிக் கலாசாரமும், கடிதங்களும்
கையால் எழுதும் கலையானது மெல்ல ஒழிந்துவருகின்றது என்று சில ஆண்டுகளிற்கு முன்னர் வெளியான ரொரொன்றோ ஸ்ரார் நாளிதழில் ஒரு கட்டுரயொன்று வெளியாகி இருந்தது. குறிப்பாக ஆங்கிலத்தில் எழுத்துக்களை தொடுத்தெழுதும் வழக்கமும், அதற்காக பயிற்சியளிப்பதும் கிட்டத்தட்ட இல்லாதே போய்விட்டது. அதுபோல கடிதம் எழுதும் வழக்கமும் மிக மிகக் குறைந்துவிட்டது. நாம் கடைசியாக எப்போது உறவினர் ஒருவருக்கோ அல்லது நண்பருக்கோ கடிதம் ஒன்றை எழுதினோம் என்றோ, கடந்த சில ஆண்டுகளில் எத்தனை கடிதங்கள் எழுதியிருக்கின்றோம் என்றோ நினைத்துப்பார்க்க திகைப்பாக இருக்கின்றது.... Continue Reading →