ஒரு மாற்றத்திற்காக தொடர்ச்சியாக சில புனைவுகளைப் படித்துக்கொண்டிருப்பதுவும் நல்லதோர் அனுபவமாகவே இருக்கின்றது. அந்த வகையில் க.நா.சு எழுதிய சர்மாவின் உயில், ஒருநாள் ஆகிய இரண்டு புனைவுகளையும் அடுத்தடுத்து வாசிக்கமுடிந்தது. “ஒருநாள்”, சாத்தனூர் என்கிற கற்பனை கிராமத்தில் மேஜர் மூர்த்தி கழிக்கின்ற ஒருநாளில் நிகழ்கின்ற நிகழ்வுகளையும், அவனது நினைவு மீட்டல்களையும், அவன் நிகழ்த்துகின்ற உரையாடல்களையும், அவை ஏற்படுத்துகின்ற சிந்தனைகளையும் கொண்டு எழுதப்பட்டது. அமைப்பு ரீதியில் இதனை குறுநாவல் என்று சொல்லலாம் என்று நினைக்கின்றேன். கிருஷ்ணமூர்த்தி என்கிற மூர்த்தி பெற்றோரை... Continue Reading →