எனது வாசிப்புப் பழக்கத்திற்கு உந்துதலாக இருந்தவர் எனது பெரியப்பா சிவதாசன் என்று பலமுறை பகர்ந்திருக்கின்றேன். எனது சிறுவயது முதல் அள்ளி அள்ளி புத்தகங்களை எமக்காக அவர் வாங்கி அனுப்பிக்கொண்டேயிருந்தார். அவர் கொழும்புவில் இருந்து அனுப்புகின்ற இதழ்கள் அப்போது நவாலியில் இருந்த எமக்கு தபாலில் வரும். பெருந்தொகையாக வருகின்ற இதழ்களை சாக்குகளில் கொண்டுவந்து எங்கள் வீட்டிற்கு விநியோகம் செய்வார்கள். வீட்டில் அம்மாவும் நிறைய வாசிக்கின்றவராக இருந்ததுவும் அப்பா துறைசார்ந்து தேர்ந்து வாசிக்கின்றவராகவும் அதேநேரத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஆதரிக்கின்றவராகவும் இருந்தார்... Continue Reading →