மொஹமட் சபாஷி என்பவர் என் இனிய நண்பர். கனேடிய வாழ்வில் எனக்கு என் வாசிப்பையும், எண்ணங்களையும் பார்வைகளையும் எப்போதும் பகிர்ந்துகொள்ளலாம் என்று வாய்த்த அரிதான சில நண்பர்களில் ஒருவர். இரானியர். ஆனால் அவ்வாறு சொல்வதில் விருப்பமில்லாது தன்னை பாரசீகர் என்றே அழைத்துக்கொள்பவர். சட்டென்று பார்த்தால் காந்தியாரின் தோற்றத்தில் இருப்பார். இந்தியாவில் கல்வி கற்றவர். இலங்கை முழுக்க சுற்றுப்பயணம் புரிந்தவர், இரானிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். அதன் காரணமாக இரானை விட்டு வெளியேறியவர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கெதிரான போராட்டங்கள் காரணமாக... Continue Reading →