லிட்டில் லைப்ரரி

எனது வாசிப்புப் பழக்கத்திற்கு உந்துதலாக இருந்தவர் எனது பெரியப்பா சிவதாசன் என்று பலமுறை பகர்ந்திருக்கின்றேன். எனது சிறுவயது முதல் அள்ளி அள்ளி புத்தகங்களை எமக்காக அவர் வாங்கி அனுப்பிக்கொண்டேயிருந்தார். அவர் கொழும்புவில் இருந்து அனுப்புகின்ற இதழ்கள் அப்போது நவாலியில் இருந்த எமக்கு தபாலில் வரும். பெருந்தொகையாக வருகின்ற இதழ்களை சாக்குகளில் கொண்டுவந்து எங்கள் வீட்டிற்கு விநியோகம் செய்வார்கள். வீட்டில் அம்மாவும் நிறைய வாசிக்கின்றவராக இருந்ததுவும் அப்பா துறைசார்ந்து தேர்ந்து வாசிக்கின்றவராகவும் அதேநேரத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஆதரிக்கின்றவராகவும் இருந்தார்... Continue Reading →

நட்பதிகாரம் 1

கண் தெரியாதவருக்கு வண்ணங்கள் எப்படி இருக்கும் என்று உங்களால் புரியவைக்க முடிந்தால், இந்த உலகத்தில் உங்களால் எதையும் புரியவைக்க முடியும்!-@nesamani89 இந்தக் ட்வீற்றர் பதிவினை 18-04-2016 குங்குமம் இதழில் காணக்கிடைத்தபோது பதின்மங்களின் நினைவொன்று மீண்டும் துளிர்விட்டது. நினைவுகள் என்னைத் தாலாட்டும்போதும் வாட்டும்போதும் வாழ்க்கையை வாழவேண்டும் என்று எண்ணும் தோறும் நான் பேச விழையும் நட்பான விசாகனுடன் இந்த ட்வீற்றரினைப் பார்த்தவுடன் தொலைபேசியில் அழைத்துப் பேசி இருந்தேன். அப்போது மீட்டிய நினைவுகளை இப்போதும் காவித்திரிந்து  அவனது ஆறாம் மாத... Continue Reading →

மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ!

எஸ்பொ விற்குப் பிந்திய இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவன் நான்.  வாசிப்பு மீது அக்கறையும் ஆர்வமும் கொண்ட எனது தலைமுறையைச் சேர்ந்த பலரையும்போலவே எஸ்பொ எனக்கும் பிடித்தமான ஒரு எழுத்தாளர்.  சிறுவயதில் இந்தியப் பத்திரிகைகளையே அதிகம் படித்து வளர்ந்தவன் என்பதால் எழுத்தாளன் என்கிற கர்வத்துடனனான விம்பங்களாக இருவர் என் மனதில் பதியவைக்கப்பட்டனர்.  ஒருவர் பாரதி.  அடுத்தவர் ஜெயகாந்தன்.  பின்னாளில் அந்த திருவுருக்கள் மனதில் தூர்ந்துபோயினர்.  ஆனால் மறக்கவே முடியாதவராக, பேராளுமையாக தாக்கம் செலுத்தியவர் எஸ்பொ அவர்கள்.  அவருடன் நெருக்கமான... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑