கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர், 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஶ்ரீஸ்கந்தன் அவர்கள் எழுதிய “மனசுலாவிய வானம்”, அரியாலையூர் நாடக ஆளுமைகள் ஆகிய இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா கனடாவில் இடம்பெற்றிருந்தது. அதில் வெளியிடப்பட்ட “மனசுலாவிய வானம்” இன்றும் எனக்கு மிகப்பிடித்த புத்தகங்களில் ஒன்றாக இருக்கின்றது. அதற்கான முக்கிய காரணமாக, அந்த நூலில் தனது நினைவுகளைப் பதிவுசெய்வதன் மூலம், அன்றைய வாழ்க்கையை, நிலவிய பண்பாட்டை, வரலாற்றை ஸ்ரீஸ்கந்தன் பதிவுசெய்திருப்பார். அதுபோலவே ”அரியாலையூர் நாடக ஆளுமைகள்” நூலும் கூட,... Continue Reading →
ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் பதிப்பிக்கப்பட்டு, சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரை பதிப்பாசிரியராகக் கொண்டு ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை இந்துசாதனத்தில் எழுதிய எழுத்துகள் “உலகம் பலவிதம்” என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்புவில் இடம்பெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து ஒக்ரோபர் மாதம் 22ம் திகதி ரொரன்றோவில் இந்நூலின் அறிமுக வெளியீட்டுவிழாவினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினரும் நூலக நிறுவனத்தினரும் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருகின்ற பழைய மாணவர் சங்கங்கள்,... Continue Reading →