நான் ஒரு தமிழ் மாணவன்; அதுவே எனது அடையாளம் என்பதைத் தொடர்ந்து சொல்லிவரும் ஆர். பாலகிருஷ்ணன் இந்தியவியல், திராவிடவியல், தொல்லியல் போன்ற துறைகளில் ஆழங்கால்பட்ட அறிவுடைய ஆய்வறிஞரும் ஆவார். தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், ஐ.ஏ.எஸ். பரீட்சையை முழுமையாகத் தமிழ்மொழி மூலம் எழுதித் தேர்தவான ஒரே நபர் என்ற பெருமையையும் கொண்டவர். இந்திய ஆட்சிப் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றி 2018-இல் ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணன் அவர்கள் ஓய்வின் பின் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை... Continue Reading →
தாயகக் கனவுகள் நூல் அறிமுகம் – சத்தியதேவன்
தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஜூன் 28 அன்று நடைபெற்ற புத்தக அரங்க விழாவில் எனது "தாயகக் கனவுகள்: நூல் குறித்த அறிமுகத்தை சத்தியதேவன் செய்திருந்தார். இந்நிகழ்வைப் பதிவுசெய்து காணொலியை Red Fox Club பதிவுசெய்துள்ளனர். அந்தக் காணொலியை இங்கே பகிர்கின்றேன். தொடர்ச்சியாக புத்தக அறிமுக விழாக்களை ஒருங்கிணைக்கும் தனுஜனுக்கும், உரையாற்றிய சத்தியனுக்கும், காணொலியப் பதிவுசெய்த Red Fox Clubக்க்கும் நன்றி.https://www.youtube.com/embed/fpjOgyRiHGE?si=ZXf-sSVDBSZ2BqF9&start=2880
எங்கட புத்தகங்கள் இதழ் குறித்து…
எங்கட புத்தகங்கள் முதலாவது இதழ் வாசித்து முடித்தேன். கச்சிதமாக வெளிவந்திருக்கின்றது. வாசிப்பினையும் வாசிப்புப் பழக்கத்தையும் பரவலாக்கம் செய்யவேண்டும் என்ற நோக்குநிலையுடனான ஒரு செயற்பாட்டு வாதத்தை எங்கட புத்தகங்கள் முன்னெடுத்திருப்பது குறித்து நன்றியும் மகிழ்ச்சியும். நாம் எதை நோக்கி வேலை செய்கின்றோமோ அந்த எல்லையை சென்றடைவதற்குத் தேவையான எல்லாக் கருவிகளையும் நாம் கைவசம் கொள்ளவும் கையாளும் பக்குவம் கொள்ளுவதும் அவசியம். எங்கட புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியினைத் தொடர்ந்து, எங்கட புத்தகங்கள் இதழும் வெளிவந்திருப்பது அவர்கள் அதனை செவ்வனே உணர்ந்திருக்கின்றார்கள்... Continue Reading →
வரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு
சத்தியன் சமகாலத்தின் முக்கியமான தமிழ்வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவராவார். தமிழ்ப்பாஷை நூலின் பதிப்பாசிரியரும் மோகனாங்கியின் பதிப்பாசிரியர்களில் ஒருவருமான சத்தியன் இலக்கிய வரலாறு குறித்துத் தொடர்ச்சியாக உரையாடியும் செயற்பட்டும் வருபவராவர். IBC தொலைக்காட்சியின் இன்றைய விருந்தினர் நிகழ்வில் சத்தியன் கலந்துகொண்டு கூறுகின்ற தகவல்கள் மிக முக்கியமானவை. அதற்கான வீடியோ இணைப்பினைக் கீழே காணலாம். மோகனாங்கியை தேடிய சத்தியனின் பயணத்தினைப் பற்றி முன்னர் நான் எழுதிய கட்டுரைக்கான இணைப்பையும் இங்கே இணைத்துள்ளேன் https://arunmozhivarman.com/2018/02/08/mohanaangi/ சத்தியன் பதிப்பாசிரியராக இருந்த தமிழ்ப்பாஷை நூலினை நூலக... Continue Reading →
தி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்
ஈழத்தவர்களின் வரலாறு பற்றியும் அவர்களின் அடையாளம் குறித்தும் பேசும்போது ஈழத்தவர்களின் பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய ஆவணப்படுத்தல்களைச் செய்வதும் ஆய்வுகளைச் செய்வதும் அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும் முக்கியமானவை. குறிப்பாக ஈழத்து இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் நாம் எமது தனித்துவத்தையும் தனியான மரபையும் பற்றித் தொடர்ந்து சொல்லவேண்டியவர்களாகவே இருக்கின்றோம். ஈழத்தவர்களுக்கென்று பதிப்புத்துறை வளர்ச்சியடையாமல் இருக்கின்ற சூழலில் சந்தைப்படுத்தலும் சவாலாகவே இருக்கின்றது. இதனால் ஏற்கனவே இருக்கின்ற பதிப்பகங்களும் கூட பொருளாதார ரீதியில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வனவாகவே இருக்கின்றன. இவற்றினை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும்... Continue Reading →