லிடியன் நாதஸ்வரமும் அவர் சகோதரி அமிர்தவர்ஷினியும் இணைந்து திருக்குறளின் 1330 குறள்களையும், அவற்றிற்கு சக்திவாசன் எழுதியுள்ள பொருளையும் கிட்டத்தட்ட 1000 பாடகர்களின் குரல்களில் ”குறளிசைக்காவியம்” என்ற பெயரில் இசையமைத்துள்ளார்கள். இது பற்றிய பதிவுகளப் பார்த்தபோது எனக்குப்பிடித்த சில திருக்குறள்களை, அவை ஏற்கனவே அவர்களின் யூடியூப் தளத்தில் கிடைக்கின்றனவா என்பதை ஆர்வத்துடன் தேடிப்பார்த்தேன். அப்போது இந்தக் குறள் பற்றிய நினைவுகள் வந்தன. ”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்கிற இந்தக் குறளுக்கான பொருளாக பரிமேலழகர்... Continue Reading →
பெரியாரின் திருக்குறள் குறித்த கருத்துகள் தொடர்பாக
பெரியாருடைய எழுத்துகள், பேச்சுகள், செயற்பாடுகள் சுயமரியாதை என்பதை நோக்கியதாகவே இருந்தன. அந்த வகையில் மொழி குறித்த பெரியாரின் கருத்துகள் பெருமிதத்தாலோ, வெறுப்பினாலோ எழுந்தவை அல்ல; அவை சுயமரியாதையை நோக்கிய அவரது பயணத்தில் குறித்த காலகட்டங்களில் மொழி, இலக்கியம், பழந்தமிழ் நூல்கள் என்பனவும் அவற்றை எழுதியோரும் தாங்கி நிற்கும் கருத்துகள் மக்களின் சுயமரியாதை உணர்வில் எவ்விதத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்கிற வகையிலான விமர்சனங்களே. தமிழ்மொழி மீது இந்தி, சமஸ்கிருதம் என்பன திணிக்கப்பட்டபோது மொழியை உரிமை என்கிற வகையில் பிரக்ஞைபூர்வமாக... Continue Reading →