புலம்பெயர் நாடுகளின் அரசியலும், புலம்பெயர் தமிழர்களும்: செய்யவேண்டியது என்ன

கனேடிய பாராளுமன்றத் தேர்தல்கள் நிறைவுபெற்று ஹார்பர் தலைமையின் கீழான வலதுசாரி பழமைவாதக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியக் கைப்பற்றி இருக்கின்றது.  அதே நேரம் புதிய ஜன நாயகக் கட்சி (NDP) கனேடியப் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக இரண்டாவது அதிக இருக்கைகளைக் கைப்பற்றி, உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியாக தெரிவாகியுள்ளது.  தொடர்ச்சியாக NDP கட்சியை அவதானித்துவந்ததன் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் எனது விருப்பத்துக்குரிய கட்சியாகவும்  NDPயினரே இருந்துவந்துள்ளனர்.  இதுவரை காலமும் நிறைய இடங்களில் என்டிபி கட்சியனர் பற்றிக் கூறியபோதெல்லாம்,... Continue Reading →

கனேடியத் தேர்தல்களும் தமிழ்விண்ணின் தில்லாலங்கடிகளும் மற்றும் ராகவன் பரஞ்சோதி

கனேடியத் தேர்தல்கள் சூடுபிடித்திருக்கின்ற இந்த நிலையில் ஏற்கனவே ஒரு முறை தமிழ் விண் (tamilwin.com) இந்தத் தேர்தல்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் செய்து வருகின்ற தகிடுதித்தங்கள் பற்றி முன்பொருமுறை முகப் பகக்த்தில் நண்பர்களுடன் நடைபெற்ற உரையாடல் ஒன்றில் கவனப்படுத்தி இருந்தேன்.  இன்று காலை மீண்டும் ஒரு முறை தமிழ் விண் தன் சாமர்த்தியத்தை / தகிடுதித்தத்தைக் காட்டியுள்ளது. நேற்று மாலை கனேடியத் தமிழ் பேரவையும், சீன கனேடிய தேசிய கவுன்சிலும் அனைத்துக் கட்சி வேட்பாளர் விவாதம் ஒன்றுக்கு... Continue Reading →

கொன்சர்வேடிவ் கட்சியினரின் தேர்தல் விளம்பரமும் கனேடியத் தமிழரின் மெத்தனமும்

கனேடிய பாராளுமன்ற தேர்தல்கள் மீண்டும் ஒருமுறை (கடந்த 7 ஆண்டுகளில் கனடா சந்திக்கின்ற 4வது பாராளுமன்ற தேர்தல் இது.  இந்த விடயத்தில் இந்தியா கூட கனடாவின் தற்போதைய நிலையை எண்ணிப் பெருமைப்படலாம்).  கனேடிய பாராளுமன்றத் தேர்தல்கள் வருகின்றா மே மாதம் 2ம் திகதி நடைபெற உள்ளன.  இந்தச் சூழ்நிலையில் Conservative Party of Canada அண்மையில் வெளியிட்ட தனது தேர்தல் விளம்பர வீடியோவைப் பார்க்க நேர்ந்தது.  அந்த விளம்பரத்தின் ஒளித்துண்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கனடாவிற்கு... Continue Reading →

ஷோபா சக்தி மீதான முகப்புத்தக விவாதங்கள் பற்றி சில பகிர்தல்கள்

ஷோபா சக்தியின் புனைவுகளும் அதில் அவர் செய்யும் எள்ளல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தொடர்ந்து குறிப்பிட்டே வந்துள்ளேன்.  ஆனால் அண்மைக்காலமாக ஷோபா சக்தி மீது செய்யப்படும் விமர்சனங்களை முன்வைத்து அவரது அனேகம் எழுத்துக்களை மீளப்படித்தபோதுதான் அவர் மீதும் எனக்கொரு அவநம்பிக்கை பிறந்தது.  இதற்கு Dse கேட்டிருந்த நான்காவது கேள்விக்கான (http://djthamilan.blogspot.com/2011/02/blog-post_15.html) பதிலை அவர் கடந்து சென்ற விதம் ஒரு நல்ல உதாரணம். அது மட்டுமல்ல, ஹரிகரசர்மா தன் பெயரின் பின்னொட்டாக வந்திருந்த சர்மா என்ற சாதிய... Continue Reading →

மணற்கேணி இதழும் சில எண்ணங்களும்

நிறப்பிரிகை ரவிக்குமார் ஆசிரியராக இருக்கின்ற மணற்கேணி இதழின் முதல் இரண்டு இதழ்களை பெற்றுக்கொண்டேன்.  இதழ்களை புரட்டிப் பார்த்தவுடனேயே மனதில் தோன்றிய விடயம், அவற்றின் அச்சு நேர்த்தி.  தமிழ்ச் சிற்றிதழ்களின் அச்சு நேர்த்தி பற்றிய பேச்சுகள் எழும்போதெல்லாம் பரந்தாமனின் அஃக் இதழ் பற்றியே சிலாகிக்கப்படும்.  துரதிஸ்டவசமாக எனக்கு அந்த இதழ்களில் ஒன்றையேனும் பார்க்கக் கிடைக்கவில்லை என்றாலும் தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் அச்சு நேர்த்தி, ஒரு/ழுங்கமைப்பு போன்ற விடயங்களில் காட்டப்படும் சிரத்தையின்மை பற்றி நிச்சயமாக அங்கலாய்ப்பு இருக்கின்றது.  மணற்கேணி இதழ்களைப்... Continue Reading →

தொலைக்காட்சிகளில் சிறுவர் நிகழ்ச்சிகள் / பால்யத்தை தொலைக்கும் சிறுவர்கள்

அண்மைக்காலமாக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மிகக் குறைவென்றாலும், மிக நீண்ட காலத்தின் பின்னர் கடந்த இரண்டு வாரங்களில் நிறையத் தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க நேர்ந்தது.  மிக மிக பெரும்பான்மையான தமிழ் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் ஏனோ தானோ என்ற அளவிலேயே இருந்ததில் எந்த வியப்பும் இல்லை என்றாலும், சில நிகழ்ச்சிகள் பற்றி கவலைப்படுவதற்கு நிறைய அம்சங்கள் இருக்கின்றன. கனேடியத் தமிழ் கூறு நல்லுகத்தில் இப்போது ஜூனியர் சூப்பர் ஸ்டார் போன்ற சிறுவர் நிகழ்ச்சிகள் அதிக... Continue Reading →

இலங்கை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – சில குறிப்புகள்: அருண்மொழிவர்மன்

இலங்கையில் வருகின்ற வருட ஆரம்பத்தில் நடைபெற இருக்கின்ற சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றி முதன் முதலில் எஸ்.பொ. கீற்று இணையத் தளத்தில் தன் எதிர்ப்பினைப் பதிவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த மாநாட்டினை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு தமிழகத்துச் சஞ்சிகைகளில் கட்டுரைகளும் கருத்துரைகளும் வெளியாகி இருந்தன. எஸ்.பொவின் கட்டுரையை எனது முகப்புத்தகத்தில் தொடுப்புக் கொடுத்திருந்த நான் அது பற்றிய எனது நிலைப்பாட்டையும் கூடவே பதிவு செய்திருந்தேன். இந்த நிலையில் இந்த மாநாட்டைப் நிராகரிக்கின்றோம் என்ற பத்மநாப... Continue Reading →

தற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்

முன்பொரு முறை அ. மார்க்ஸ் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில்  “ஒருவர் ஓரிடத்தில் சரியான அல்லது தெளிவான பார்வையுடன் இருக்கிறார் என்றால் அவர் எல்லா இடத்தும் அப்படி இருக்கவேண்டும் என்பது இல்லை. எழுத்தாளர்கள் உள்ளிட்ட நிறைய ஆளுமைகளை அணுகும்போது இதே கருத்துடன் அணுகுவதே எனது வழக்கம்” என்று குறிப்பிடிருந்தேன்.  துரதிஸ்டவசமாக இதே மேற்கோளை எனக்கு அதிகம் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான தேவகாந்தனுடனும் இணைத்துப் பார்க்கவேண்டிய நிலையை அடைந்துள்ளேன்.  கனடாவில் இருந்து வெளிவருகின்ற “தாய்வீடு” என்கிற பத்திரிகையில் தேவகாந்தன்... Continue Reading →

கொல்லப்படும் பெண்குழந்தைகளும், காணாமல் போகும் பெண் குழந்தைகளும்

It’s not a child.  It’s a girl baby, and we can't keep it.  Around these parts, you can't get by without a son.  Girl babies don't count."   சீனாவில் பிறந்து தற்போது லண்டனில் வசித்து வரும் ஸு ஸின்ரன் (Xue Xinran) எழுதிய The good woman of China என்கிற புத்தகத்தில், சீனாவில் பெண் குழந்தைகள் பிறக்கின்ற போது பொதுப்புத்தி எவ்வாறு அதை எதிர்கொள்ளுகின்றது என்பதை... Continue Reading →

விதிக்கப்பட்ட வாழ்க்கையும் வீழ்ந்து சென்ற நம்பிக்கைகளும் – தேவகாந்தனின் விதி நாவல் பற்றிய சில அனுபவங்கள்

விதி என்றால் விதிக்கப்பட்டது என்று எமக்கும் பத்தாம் ஆண்டில் படிப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதே பத்தாம் ஆண்டில் தான் 'நாடென்ப நாடா வளத்த, நாடல்ல நாட வளம் தரும் நாடு' என்பதும் படிப்பிக்கப்பட்டிருந்தது.  ஆனால் தேவகாந்தன் தனது விதி நாவலில், நாடியும் வளம் தந்து விடாத நாடொன்றில் பிறந்து வளர்ந்தவர்களின் கதையைச் சொல்லுவதன் மூலம் புதிய விதி பற்றிச் சொல்லுகின்றார். "ஒரு காலத்தில கடவுளால படைக்கப்பட்டது விதி என்ற ஒரு கருத்து இருந்தது.  பிறகு ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் செய்கிற... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑