கொன்சர்வேடிவ் கட்சியினரின் தேர்தல் விளம்பரமும் கனேடியத் தமிழரின் மெத்தனமும்

கனேடிய பாராளுமன்ற தேர்தல்கள் மீண்டும் ஒருமுறை (கடந்த 7 ஆண்டுகளில் கனடா சந்திக்கின்ற 4வது பாராளுமன்ற தேர்தல் இது.  இந்த விடயத்தில் இந்தியா கூட கனடாவின் தற்போதைய நிலையை எண்ணிப் பெருமைப்படலாம்).  கனேடிய பாராளுமன்றத் தேர்தல்கள் வருகின்றா மே மாதம் 2ம் திகதி நடைபெற உள்ளன.  இந்தச் சூழ்நிலையில் Conservative Party of Canada அண்மையில் வெளியிட்ட தனது தேர்தல் விளம்பர வீடியோவைப் பார்க்க நேர்ந்தது.  அந்த விளம்பரத்தின் ஒளித்துண்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் கனடாவிற்கு 490 ஈழ அகதிகளுடன் வ்ந்து சேர்ந்த சன் சீ கபலின் படம் பின்னணியில் காட்டப்படும்போது “Canada wants to welcome those who want to build a better future; but our openness doesn’t extent to criminals to target Canadian generosity ” என்கிற பதம் பாவிக்கபப்டுகின்றது.  இது பற்றி எதிர்பார்த்த அல்லது வரவேண்டிய எந்த சலனமும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரவில்லை என்பது வேதனைக்குரியது.  Conservative party of Canadaவிடம் இருந்து இதை விட வேறொன்றையும் எதிபார்க்கமுடியாதுதான் என்றாலும், அதையே ஒரு காரணமாகச் சொல்லி சாதிக்கும் மௌனங்கள் நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்திச் செல்கின்றன.

இநத விளம்பரத்தைப்பார்த்ததும் இதில் Conservative கட்சியினர் தம்மைச் சட்ட ரீடியாகக் காத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ஹ்டிருப்பார்கள் என்பது பற்றி நண்ப்ர் ஒருவரிடம் உரையாடினேன்.  அதே நேரம் இது பற்றி பொது வெளியில் கவனப்படுத்தவேண்டும் என்ற அக்கறை எனக்கு இருந்தது.  மறு நாள் இது பற்றி முகப்புத்தகத்தில் பகிர்ந்துவிட்டு, http://www.adstandards.com என்கிற அமைப்பினரிடம் கவனப்படுத்திவிட்டு (416 961 6311)அவர்கள் ஊடாக இதனை கனேடியத் தேர்தல் ஆணையத்திடமும் முறையிடலாம் என்று தெரிந்துகொண்டேன்.  அடுத்து கனேடியத் தமிழ் காங்கிரஸினரைத் தொடர்புகொண்டு இது பற்றி அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்று கேட்டேன்.   அவர்கள் தாம் இது பற்றி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர் என்று கூறினர். கனேடியத் தமிழ் காங்கிரஸினரிடம் எனக்கிருக்கின்ற விமர்சனங்களில் ஒன்று அவர்கள் தமது இணையத்தளத்தை உடனுக்குடன் இற்றைப்படுத்துவதில்லை என்பதும், இது பொன்ற பொது விடயங்களில் தமது செயற்பாடுகளை வெளிப்படையாக முன்வைப்பதுமில்லை என்பதுமே.  மேற்படி சம்பவம் நடந்தபோதும் மார்ச் 8ற்குப்பின்னர் அவர்களது இணையத்தளம் இற்றைப்படுத்தப்படவில்லை.  அவர்களிடம் இந்த விளம்பரம் பற்றியும் இது பற்றி எவ்விதம் முறையிடலாம் என்றும் அவர்கள் இணையத்தளத்தில் ஒரு பதிவொன்றினை விளியிடும்படிக் கேட்டுக்கொண்டேன்.  அவர்கள் ஒப்புக்கொண்ட போதும் இன்றுவரை அது நடைபெறவில்லை.  இது போன்ற விடயங்களில் CTCயினர் போதிய கவனம் எடுப்பது அவசியம் என்றே நினைக்கிறேன்.  தமிழ்த் தேசியப் போராட்டங்களில் சமூக வலைத்தளங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்றே நினைக்கிறேன்.   நடைபெறப்போகின்ற கனேடியத் தேர்தல்களை தமிழர்கள் எவ்வாறு எதிர்கொள்ள உள்ளனர் என்கிற கேள்வி இருக்கின்றது.  அது பற்றிய எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள முதல் இந்த விளம்பரம் பற்றிய முறைப்பாடுகளை

Commissioner of Canada Elections
c/o Elections Canada
257 Slater Street
Ottawa, Ontario
K1A 0M6
Fax: 1-800-663-4908
E-mail: commissionersoffice@elections.ca

என்கிற முகவரிகள் மற்றும் தொலைநகல் இலக்கங்களூடாக மேற்கொள்ளலாம்.  எனது பங்கிற்கு நான் ஒரு முறைபாட்டைச் செய்து அது கிடைக்கப்பெற்றது என்று தேர்தல் ஆணையத்தினரின் மறுமொழியையும் பெற்றுள்ளேன்.  இவ்வாறு முறைபாடு செய்வதை கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் உடனடியாகச் செய்யவேண்டிய தேவை இருக்கின்றது.

நன்றிகள்:கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட + எனது வேலைப்பளுவின் போது முறைப்பாட்டுக கடிதம் ஒன்றை வடிவமைப்பதில் உதவிய நண்பருக்கு

7 thoughts on “கொன்சர்வேடிவ் கட்சியினரின் தேர்தல் விளம்பரமும் கனேடியத் தமிழரின் மெத்தனமும்

Add yours

  1. நாம் மிக முக்கியமான தருணங்களில் அக்கறையில்லாமல் வாளாவிருக்கிறோம். எமது பின்னடைவுகளுக்கு ஊடகங்களின் அசமந்தப் போக்கே காரணம். அவர்கள் பொறுப்பற்று எந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற சமூகப் பிரக்ஞையற்று வணிக நோக்கத்தோடே செயற்படுகிறார்கள். எமது மக்களை எவன் எவன் எல்லாம் ஏளனமாகப் பார்க்கிறான் என்று எண்ணும் போதெல்லாம் வேதனையைத்தவிர எதனையும் உணர முடியவில்லை. இதிலே கனேடிய தமிழ் காங்கிரசாருக்கு என்னுடைய கண்டணங்களையும் பதிவு செய்து கொள்கிறேன்.

    Like

  2. நானும் facebookல் உங்கள் இணைப்புக் கிடைத்ததுமே முறைப்பாடொன்றைச் செய்தாயிற்று. மற்றையபடி தமிழ் அமைப்புகளில் எந்தவித நம்பிக்கையும் எனக்கில்லை. என்ன, CTBC விளம்பரம் மாதிரியே ஓரிருவர் மட்டும் முறையிட்டு பிரயோசனம் இருக்குமா தெரியவில்லை.

    Like

    1. நல்லது கீத். உண்மைதான், எல்லாரும் மற்றவரைப் பார்க்காமல் தாமாகவே முன்வந்து இது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டும். அதே நேரம், மகளிடமும் இது போன்ற பிரச்சனைகளை எடுத்துச் செல்லவேண்டும்.

      மறுக்கப்பட்ட எமது உரிமைகளுக்காக ஈழத்தில் போராடிக்கொண்டிருக்கின்ற அதே வேளை, புலம்பெயர் நாடுகளில் எமக்கு இருக்கின்ற உரிமைகளையும் மெல்ல மெல்ல கைவிட்டுவருகின்றோமோ என்றே எண்ணத் தோன்றுகின்றது

      Like

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑