கடுப்பூட்டும் கட்டுரைகள் – அருண்மொழிவர்மனின் ‘தாயகக்கனவுகள்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும் – வாசன்

அருண்மொழிவர்மனின் ‘தாயகக் கனவுகள்’ நூல் பார்வையிடக் கிடைத்தது. ‘பிரதிகளை முன் வைத்து ஓர்  உரையாடல்’  என்ற தலைப்புடன்   தனது வாசிப்பனுபவங்களையும் வாழ்பனுவங்களையும் திரட்டி அவர் எழுதிய 15 கட்டுரைகளின் தொகுப்பாக  நூல் வெளிவந்திருக்கின்றது. ஆழமானதும் விசாலமானதுமான அவரது வாசிப்பும், அந்த  எல்லைகளின் விஸ்தீரணமும்  வியக்க வைக்கின்றது. தமிழிலும் ஆங்கிலத்திலுமான அவரது வாசிப்புப் பயணமானது    மிலன் குந்த்ரோவின் ‘மாயமீட்சி’ இல் இருந்து தமிழினி, ஷோபா சக்தி, அகரமுதல்வன் போன்றவர்களின் படைப்பிலக்கியங்கள் ஊடாக பயணித்து,  கோர்டன் வைஸ் இன் ‘The... Continue Reading →

சுப்பாராவ் செய்யும் அறிமுகங்கள்

புத்தகக் கண்காட்சி குறித்தும், புத்தக வெளியீடுகள் குறித்ததுமான பதிவுகள் நிறைந்திருக்கின்றபோது அதனுடன் தொடர்பான வாசிப்புப் பழக்கம்  குறித்தும், வாசிப்புப் பழக்கத்தில் முக்கிய பங்காற்றும் நூலகங்கள், நூலகர்கள் குறித்தும் பேசவேண்டியிருக்கின்றது. புத்தக கண்காட்சி நடக்கின்ற காலப்பகுதியில் தற்செயலாகவோ / பிரக்ஞை பூர்வமாகவோ ஜனவரி மாத உயிர்மை இதழில் ச. சுப்பாராவ் எழுதியிருக்கின்ற Gina Sheridan என்ற நூலகர், எழுதிய  I work at a public library என்ற நூல் குறித்த அறிமுகம் மிகவும் சுவாரசியமாக உள்ளது.  சுப்பாராவ்... Continue Reading →

கல்வியும் மதமும் குறித்து பெரியார்…

பெரியாரை வெறுமனே ஒரு நாத்திகவாதியாய் மட்டுமே குறுக்கி அடையாளப்படுத்திக் கடந்துபோவர்களிடம் ஓர் அரசியலும், அறியாமையும் இருக்கின்றது என்றே கருதவேண்டியிருக்கின்றது.  பெரியார் தன்னளவில் நாத்திகராய் இருந்தாலும், கடவுள் மறுப்பை வலியுறுத்தினாலும் அதற்குக் காரணம் அவர் கல்வி, சமூகம், அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் போன்ற அனைத்துப் பரப்புகளிலும் மதம் பிற்போக்குத்தனம் நிறைந்ததாகவும் ஒடுக்குமுறைகளையும் மூடநம்பிக்கைகளையும் நியாயப்படுத்துவதுமாக இருந்தது என்பதே.  சிதம்பரம் அண்ணாமலை நகரில் 19-2-1956 இல் பெரியார் ஆற்றிய உரையின் கீழ்க்காணும் பகுதியைப் பாருங்கள், இதே பிரச்சனை இன்றும்... Continue Reading →

கொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள்

தற்போது உலகளாவிய ரீதியில் பரவியிருக்கின்ற கொரொனாத் தொற்று மற்றும் அதன்விளைவுகள் பற்றிய யுவால் நோவா ஹராரி எழுதிய மூன்று கட்டுரைகளை இதுவரை படித்திருக்கின்றேன்.

In the Battle Against Coronavirus, Humanity Lacks Leadership என்கிற முதலாவது கட்டுரை Time இதழில் வெளியானது. 

”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம்

நூலக நிறுவனத்தின் பொறுப்பொன்று காரணமாக அதன் எண்ணிம நூலகத்தில் இருக்கின்ற புத்தகங்களை தட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது மேமன் கவி தொகுத்த ”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” என்கிற நூலினைப் பார்த்ததும் அதன் தலைப்பு ஏற்படுத்திய கவனயீர்ப்பினால் உடனேயே தரவிறக்கி வாசிக்கத் தொடங்கினேன். நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் நான் ஊகித்துக் கொண்டதைப் போலவே 2001 ஆம் ஆண்டு ஈழத்து இலக்கியத்தின் மிக முக்கியமான இலக்கியச் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் எழுத்தாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்கு அவர் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் பணிகளுக்காக கௌரவ... Continue Reading →

காலம் : 30 ஆண்டு | 54 இதழ்

காலம் இதழ் தொடங்கி 30 ஆவது ஆண்டு நிறைவையும் சொற்களில் சுழலும் உலகு நூல் வெளியீட்டு விழாவையுமொட்டி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு காலம் இதழ் பற்றிப் பேசியிருந்தேன்.  காலம் இதழிற்கும் அல்லது காலம் செல்வத்திற்கும் எனக்கும் இருக்கின்ற தொடர்பு நான் கனடாவுக்கு வந்து புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய காலந்தொட்டு இருக்கின்றது எனலாம்.   அவரது வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சிகளும் அவர் ஒருங்கிணைத்த பல்வேறு கூட்டங்களும் என்னளவில் முக்கியமானவை.  அந்த வகையில் செல்வம் அவர்கள் நன்றிக்குரியவர்.  நான், வாழும்... Continue Reading →

எதைச் சொல்லித் தேற்றுவது!

புதிய தொழினுட்பங்கள் பற்றித் தேடிதேடித் வாசித்து தன்னை இற்றைபப்டுத்து வைப்பவராக இருந்த கருணா தொழினுட்பத்தின் உச்சபட்ச சாத்தியங்களையெல்லாம் நாம் பயன்படுத்தவேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துபவராக இருந்தார்.  தாய்வீடு நடத்திய அரங்கியல் விழாக்களில் அவர் தொடர்ந்து இதனைக் கையாண்டதுடன், தொழினுட்பக் கோளாறுகள் ஏற்படுத்தக் கூடிய நெருக்கடிகள் சில கசப்பான நினைவுகளைத் தந்தபோதும் தொழினுட்பக் கோளாறுகளைப் புரிந்துகொள்ளாமல் அவற்றுக்கு அவர் மீது குற்றப்பத்திரிகைகளைச் சிலர் பரப்புரைச் செய்தபோதும் கூட தொடர்ச்சியாக தொழினுட்பத்தை நம்புபவராகவே இருந்தார். 

பிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியரும் பல்வேறு பாடநூல்களை எழுதியவருமான பிரான்சிஸ் மாஸ்ரர் என்றழைக்கப்படுகின்ற மனுவேல்பிள்ளை பிரான்சிஸ் அவர்கள் நவம்பர் 18 அன்று தனது 91வது வயதில் இயற்கையெய்தியிருக்கின்றார்.  அவரது இழப்பு, பலவாண்டுகளுக்கு முன்னர் அவரிடம் கற்ற பல்வேறு மாணவர்களுக்கும் கூட ஏற்படுத்தியிருக்க்கின்ற  தாக்கத்தை அறியக்கூடியதாக இருக்கின்றது. பிரான்சிஸ் மாஸ்ரரிடம் நான் கல்விகற்கவில்லை; ஆனாலும் அவரிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் 2017 ஆம் ஆண்டிற்கான கலையரசி நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவம் செய்யப்பட்ட... Continue Reading →

பௌத்த குருமாரும் இலங்கை அரசியலும்

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் ஞானசார தேரர் தலைமையில் நீதிமன்றத் தீர்ப்பினைப் புறம் தள்ளி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்திருக்கின்ற நிகழ்வு இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் காட்டுகின்ற செல்வாக்கினையும் அதிகாரத்தையும் மீண்டும் வெளிப்படுத்திக் காட்டுவதுடன் அங்கே சிறுபான்மையினருக்கு எந்தவிதமான சம உரிமைகளும் இலகுவில் கிடைக்கப்போவதில்லை என்பதையும் காட்டுகின்றது சமவுரிமைக்கும் சமத்துவத்துக்கும் குரல் எழுப்புகின்றனவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தவிடயம் குறித்துப் போராடவேண்டும். செப்ரம்பர் 2019 தாய்வீடு பத்திரிகையில் க. சண்முகலிங்கம் எழுதிய பௌத்த குருமாரும் இலங்கை... Continue Reading →

ஈழக்கூத்தன் தாசீசியஸ்

இந்த நோக்கமும் அந்த அக்கறையின்பாற்பட்ட தொலைநோக்குமே தாசீசியஸை வழிநடத்தியிருக்கவேண்டும்.  பிபிசியில் பணியாற்றியதில் இருந்து பின்னர் ஐபிசியை உருவாக்குவதற்கான தேவை எதுவாக இருந்தது என்பது குறித்தும், பின்னர் ஐபிசியை உருவாக்கியது குறித்தும் கானா பிரபாவிற்கு வழங்கிய நேர்காணலில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.  அதுபோலவே தமிழ்க் குடில் என்கிற அவரது செயற்திட்டம் மிகவும் முன்னோடியானதென்பதை அதன் நோக்கங்களை வைத்துப் பார்க்கின்றபோது அறியமுடிகின்றது.  அதற்கப்பால் நாராய் நாராய் என்கிற நாடகப் பயணம் இன்னொரு முக்கியமான செயற்திட்டம்.  இந்த விடயங்களையெல்லாம் வெறும் தரவுகளாக இல்லாமல் எந்தச் சூழலில் எந்தப் பின்னணியில் எந்த நோக்கத்துக்காக இவையெல்லாம் உருவாகிய என்பதை இந்த நூலினூடாகவே அறியமுடிகின்றது.

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: