சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி எஸ்.பி. ஜனநாதன்

சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி என்ற பெயரில் மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனுக்கான நினைவு மலர் ஒன்றை GKV மகாராஜா முரளீதரனின் தொகுப்பில் பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டிருக்கின்றனர்.  ஜனநாதனின் முதற்திரைப்படமான இயற்கையின் பாடல்களும் காதல் கொண்டேன் படத்தின் பாடல்களும் ஒரே இசைத்தட்டாக வெளிவந்திருந்தன.  எனக்கு மிகவும் பிடித்த இசைத்தட்டுகளில் ஒன்றாக அதைச் சொல்வேன்.  இயற்கையில் எல்லாரும் பெரிதும் சொல்லுகின்ற, மிகப்பிரபலமான பாடல் “காதல் வந்தால் சொல்லி அனுப்பு…”; எனக்கும் மிகப் பிடித்த பாடல்களில் ஒன்றாக இன்றும் இருக்கின்றது. ... Continue Reading →

அறமுற்றுகை குறும்படமும் ஏமாற்றத்தின் சுவடுகளும்

மயன் காந்தன் எழுதி இயக்கிய அறமுற்றுகை என்கிற குறும்படத்தினை சென்ற டிசம்பர் மத்தியில், அந்தக் குறும்படத்தின் இணைத் தயாரிப்பாளர்களான Master screen Jaffna தமது உத்தியோக பூர்வமான யூ ட்யூப் தளத்தில் பதிவேற்றியபோதே பார்த்திருந்தேன்.  ஈழத்துத் திரைக்கலைஞர்களில் எனது விருப்பத்துக்குரியவரான மதி சுதா நடித்திருந்த குறும்படம் என்பதனை முகநூல் ஊடாகத் தெரிந்துகொண்டதால் இந்தக் குறும்படத்தினை ஆவலுடன் பார்த்தேன் என்றே சொல்லவேண்டும். குறிப்பாக மதி சுதா, ஈழத்துத் திரைப்படங்கள் என்பதை பிரக்ஞையுடன் அணுகி அதில் தொடர்ந்து ஈடுபடுபவர்.  தான்... Continue Reading →

UN LOCK குறும்படம் திரையிடல்

Toronto Reel Asia International Film Festival இல் திரையிட தெரிவான Unlock குறும்படத்தின் இயக்குனர் நிரு நடராஜா மேற்படி திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ரொரன்றோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் அக்குறும்படத்தினைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. Unlock அவரது முதலாவது திரைப்பட முயற்சி என்றபோதும் திரைத்துறையில் அவரது பங்கேற்பு ஏற்கனவே இருந்திருக்கின்றது.  மூங்கில் நிலா என்கிற ஒரு இசைத் தொகுப்பினை 2000 ஆம் ஆண்டளவில் வெளியிட்டிருந்த நிரு, பின்னர் கலாபக் காதலன், ராமேஸ்வரம் ஆகிய தென்னிந்தியத்... Continue Reading →

Happy Together திரைப்பட அறிமுகம்

In the mood for love திரைப்படத்தின் இயக்குனர் என்றே எனக்கு அறிமுகமான Wong Kar-wai, அதற்கு முன்னதாகவே இயக்கிய முக்கியமான திரைப்படமான Happy Together 1997 இல் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றது.  1997 ஆம் ஆண்டுக்குரிய கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை வொங் கார்-வைக்குப் பெற்றுத்தந்த  இத்திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் Tony Leung Chiu-wai, Leslie Cheung, Chang Chen ஆகியோர்  நடித்திருக்கின்றார்கள்.  ஹொங்கொங்கில் இருந்து ஆஜெந்தீனாவிற்குப் புலம்பெயர்ந்திருக்கின்ற ஆண் இணைகளான... Continue Reading →

வரலாற்றுணர்வும் கனடா 150 / காலனித்துவம் 150

ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ஒவ்வொரு மாதமும் கடைசிக் சனிக்கிழமைகளில் ஒழுங்குசெய்கின்ற கூட்டங்களிற்கு இயன்றவரை போய்விடுவதை வழமையாகக் கொண்டிருக்கின்றேன்.  இந்த முயற்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை கிட்டத்தட்ட 3 வருடங்களாக எந்த ஒரு மாதமும் தடைப்படாமல் ஒவ்வொரு மாதமும் கடைசிச் சனிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 7 மணிவரை இடம்பெறும் இந்தக் கூட்டங்கள் முக்கியமானவையாகவே தோன்றுகின்றன.  சில கூட்டங்களில் மிகவும் மேலோட்டமான தன்மைகளிலான அலசல்கள் இருந்தாலும் கூட சரியான திட்டமிடலுடனும் ஒழுங்குடனும் பொறுப்புணர்வுடன் கட்டுரைகள் தயாரிக்கப்பட்டு... Continue Reading →

நியோகா : சில பகிர்தல்கள்

ஏப்ரல் இரண்டாம் திகதி கனடாவுக்கான நியோகா திரைப்படத்தின் முதலாவது திரையிடலில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது.  இத்திரைப்படம் கனடாவில் வாழும் எழுத்தாளரும் நாடகரும் குறும்பட இயக்குனருமான சுமதி பலராமின் முதலாவது முழுநீளத் திரைப்படமாகும்.  பெரும்பாலும் கனடாவிலேயே படப்பிடிப்பு நடந்த இத்திரைப்படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்களும்  தொழினுட்பக் கலைஞர்களும் கனடாவைச் சேர்ந்தவர்கள்.  ஆயினும் இத்திரைப்படம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற  சர்வதேசதிரைப்பட விழாவிலும், இத்தாலி லுமினியர் திரைப்பட விழாவிலும், லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற திரைப்படவிழாவிலும், யகார்த்தாவில் இடம்பெற்ற பெண்கள் திரைப்பட விழாவிலும் ஆக வெவ்வேறு... Continue Reading →

அதனிலும் கொடிது முதுமையில் தனிமை

ஆரஞ்சு மிட்டாய் படம் பார்த்தேன்.  இன்றைய அவசர உலகில் உறவுகளின் அபத்தம், தனிமனிதத் தேர்வுகளின் மீது லௌதீக காரணிகள் திணிக்கும் தாக்கம் அல்லது நெருக்கடிகள் பற்றி இத்திரைப்ப்டம் விவரிக்க முயலுகின்றது.  நன்றாக எடுத்திருக்கக் கூடிய கதை.  ஆனால் திரைக்கதையின் பலவீனத்தாலும், கதையை நகர்த்திச் செல்வதில் ஓரளவு வெளிப்படையாகவே தெரிந்த குழப்பத்தாலும், பொறுத்தமற்ற பாத்திரத் தேர்வுகளாலும் சற்றே தள்ளாடித் தள்ளாடி.... ஆயினும் நல்ல திரைப்படம் ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்ற ஆர்வம் விஜய் சேதுபதியிடமும், பிஜூ விஸ்வநாத்திடமும் இருப்பது வெளிப்படையாகத்... Continue Reading →

புதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு

புதிய பயணி இதழ் பயண அனுபவங்கள் பற்றி இலக்கியங்கள் ஊடாகப் பதிவுசெய்வது தமிழுக்குப் புதிய மரபன்று.  சங்க இலக்கியங்களின் ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகிய பாடல்வகைகளை பயண இலக்கியங்களாக வகைப்படுத்தலாம் என்று அறிய முடிகின்றது.  பயண இலக்கியம் சார்ந்து இவ்வாறான ஒரு நீண்ட மரபு இருப்பினும் தமிழில் பயண இலக்கியத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஏ.கே. செட்டியார்.  இவரே, பயண இலக்கியம் என்கிற பிரக்ஞையுடன் தொகுப்பு நூல் ஒன்றினை வெளியிட்டவர்.  1850 முதல் 1925 வரை வெளியான பலரது... Continue Reading →

குறும்படப் பயிற்சிப் பட்டறை : சர்க்கரைப் பந்தலிற் தேன்மழை

ஈழத்தமிழர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக உணர்வது போல தமக்கான தனியான பண்பாட்டு வெளிப்பாடுகளையும் பேணவேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு.  துரதிஸ்டவசமாக, பெரும்பாலும் நாம் எம்மை தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களுடன் கலந்தே அடையாளப்படுத்தி வருகின்றோம்.  இது எமக்கான தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை அழித்துவிடுவதுடன், தேச உருவாக்கத்திலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது.  எளிய உதாரணமாக, புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற திருமண விழாக்கள் போன்ற சடங்குகளில் தமிழகத்து, வட இந்திய பாணியினது செல்வாக்குகள் அதிகரித்து வருவதை அவதானிக்கலாம். தவிர, புலம்பெயர்... Continue Reading →

பூர்ணம் விஸ்வநாதன் முன்னொருநாள் சொன்ன கதை

பூர்ணம் விஸ்வநாதன் என்றவுடன் எமக்கு அவர் திரையில் ஏற்று நடித்த சில பாத்திரங்களே நினைவு வரும்.  குறிப்பாக மகாநதி, வருஷம் 16, ஆசை திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்.  தனது நாடகங்கள் பலவற்றுக்கு உயிர் கொடுத்தவர் பூர்ணம் விஸ்வநாதன் என்று சுஜாதா எழுதியிருக்கின்றார்.  தொடக்கத்தில் தான் எழுதி அவர் நடித்த நாடகங்கள் நிறைவானதாக தனக்குத் தோன்றியதால் பிற்பாடு சில நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதனை மனதில் வைத்துக்கொண்டே தான் எழுதியதாகவும் சுஜாதா கற்றதும் பெற்றதுவும் இல் குறிப்பிட்டிருந்தார். ... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑