கனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்

குறிப்பு: ரொரன்றோவில் இருக்கின்ற ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயத்திற்கு சிற்பிகளாக அழைத்து வரப்பட்ட நால்வர் CBC க்கு கோயில் தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்தும் அங்கு நடக்கின்ற அத்துமீறல்கள் குறித்தும் தெரிவித்த தகவல்களையும் அது தொடர்பான மேலதிக கருத்துகளையும் தொகுத்து பதிவேற்றியிருக்கின்றது.  இவற்றை இக்கோயில் நிர்வாகம் மறுத்திருந்தாலும், அந்தக் குற்றச்சாற்றுகளில் உண்மை இருக்கலாம் என்று கருதமுடிகின்றது.   CBC இல் வெளியான கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம்.  http://www.cbc.ca/news/canada/toronto/hindu-priest-abuse-allegations-1.4485863 கனடாவில் இருக்கின்ற கோயில்களில் நடக்கின்ற சுரண்டல்கள் குறித்தும் அவை எவ்விதம்... Continue Reading →

காத்திருப்பு கதை குறித்து…

 தமிழ்நதி எழுதி கபாடபுரம் இணைய இதழில் வெளிவந்திருக்கின்ற இந்தக் கதை பேசுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விடயம் முக்கியமானது.  பொதுவாக, சமகாலப் பிரச்சனைகள் பற்றி கலை இலக்கியப் படைப்புகள் ஊடாக வெளிப்படுத்தவேண்டும் என்பதை தொடர்ச்சியாக முன்வைப்பது எனது வழக்கம்.  அந்த வகையில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி கதையொன்றில் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் அதுவும் தமிழ்நதி போன்ற பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் முக்கியமானது.  ஆனால் தமிழ்நதியின் இந்தக் கதையில் இருக்கின்ற ஒரு விதமான ”வீர வழிபாட்டுத்தனம்” -... Continue Reading →

UN LOCK குறும்படம் திரையிடல்

Toronto Reel Asia International Film Festival இல் திரையிட தெரிவான Unlock குறும்படத்தின் இயக்குனர் நிரு நடராஜா மேற்படி திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ரொரன்றோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் அக்குறும்படத்தினைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. Unlock அவரது முதலாவது திரைப்பட முயற்சி என்றபோதும் திரைத்துறையில் அவரது பங்கேற்பு ஏற்கனவே இருந்திருக்கின்றது.  மூங்கில் நிலா என்கிற ஒரு இசைத் தொகுப்பினை 2000 ஆம் ஆண்டளவில் வெளியிட்டிருந்த நிரு, பின்னர் கலாபக் காதலன், ராமேஸ்வரம் ஆகிய தென்னிந்தியத்... Continue Reading →

நிறம் தீட்டுவோம் ஆவணப்படம்

விபீஷன் மகேந்திரராஜாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கின்ற “நிறம் தீட்டுவோம்” என்கிற ஆவணப்படத்தினை அண்மையில் பார்க்க முடிந்தது.  வவுனியாவில் வசிக்கின்ற விபீஷன் இருபதுகளின் ஆரம்ப வயதில் இருப்பவர் என்று அறியமுடிகின்றது.  சமூக வலைத்தளங்களை மையமாகக் கொண்டு தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற அல்லது முன்னெடுப்புகளை ஆரம்பிக்கின்ற தலைமுறையைச் சேர்ந்த அவரது சமூக அக்கறையையும், பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாக இந்த ஆவணப்படம் அமைகின்றது. நிறம் தீட்டுவோம் என்கிற ஆவணப்படம் பற்றிய அறிமுகக் குறிப்பினை  “பார்வைப்புலனை முற்றிலும் இழந்த மாணவன் கலைச்செல்வனின் வாழ்க்கைப்பயணத்தினூடாக மாற்றுவலு மாணவர்களின்... Continue Reading →

Happy Together திரைப்பட அறிமுகம்

In the mood for love திரைப்படத்தின் இயக்குனர் என்றே எனக்கு அறிமுகமான Wong Kar-wai, அதற்கு முன்னதாகவே இயக்கிய முக்கியமான திரைப்படமான Happy Together 1997 இல் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றது.  1997 ஆம் ஆண்டுக்குரிய கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை வொங் கார்-வைக்குப் பெற்றுத்தந்த  இத்திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் Tony Leung Chiu-wai, Leslie Cheung, Chang Chen ஆகியோர்  நடித்திருக்கின்றார்கள்.  ஹொங்கொங்கில் இருந்து ஆஜெந்தீனாவிற்குப் புலம்பெயர்ந்திருக்கின்ற ஆண் இணைகளான... Continue Reading →

ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் பதிப்பிக்கப்பட்டு, சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரை பதிப்பாசிரியராகக் கொண்டு ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை இந்துசாதனத்தில் எழுதிய எழுத்துகள் “உலகம் பலவிதம்” என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன.  கொழும்புவில் இடம்பெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து ஒக்ரோபர் மாதம் 22ம் திகதி ரொரன்றோவில் இந்நூலின் அறிமுக வெளியீட்டுவிழாவினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினரும் நூலக நிறுவனத்தினரும் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருகின்ற பழைய மாணவர் சங்கங்கள்,... Continue Reading →

ஒழுங்குபடுத்தலின் வன்முறை

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆசிரியர்களுக்கு இருக்கின்ற அதிகாரமும், அதனை உடல் உளவன்முறையாக மாணவர்கள் மேல் திணிப்பதுமாக பல்வேறு அவதானங்களை நாம் கடந்தே வந்திருப்போம்.  மாணவர்களைத் துன்புறுத்துவதிலும் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதையும் உளமார ஒருவித குரூர திருப்தியுடன் அனுபவித்துச் செய்யும் ஆசிரியர்கள் பலரை நான் ஈழத்தில் கல்விகற்ற நாட்களில் கண்டிருக்கின்றேன்.  பலதடவைகள் அவற்றைப் பதிவுசெய்யவிரும்பியிருந்தாலும் இப்போது அனேகம் ஓய்வுபெறும் வயதில் இருக்கக்கூடிய அந்த ஆசிரியர்கள் மீது ஒருவேளை இவை குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவிடுமோ என்று தவிர்த்தே வந்தேன். ... Continue Reading →

போர்க்காலக் கவிஞர்களின் போர்க்காலக் கவிதைகள்

-சிறுகுறிப்பு தமிழ்த் தாய் மன்றம் ஒழுங்கு செய்திருந்த “போர்க்காலக் கவிஞர்களின் போர்க்கால கவிதைகள்” என்கிற இலக்கிய அமர்வொன்று செப்ரம்பர் ஒன்பதாம் திகதி நடைபெற்றது.  தமிழ் முறைத் திருமணம் செய்து வைத்தல், தமிழ்ப் பெயர் உள்ள குழந்தைகளுக்குப் பரிசு வழங்குதல் என்பவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் தமிழ்த்தாய் மன்றம் ஒழுங்குசெய்திருந்த முதலாவது இலக்கிய நிகழ்வு இது என்று நிகழ்விலேயே குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிகழ்வில் அம்புலியின் “மீண்டும் பிறக்கின்றோம்”, கப்ரன் கஸ்தூரியின் “வல்லரசுகள்” மேஜர் பாரதியின் “விடிவிற்காய் எழுவோம்”, வியாசனின் (புதுவை... Continue Reading →

புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற சங்கங்களும் அமைப்புக்களும் கவனத்திற் கொள்ளவேண்டியவை

- சில கருத்துப் பகிர்வுகள் கனடாவுக்கான ஈழத்தமிழர்களின் வருகை பற்றிய பதிவுகள் 1950களின் நடுப்பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெறுகின்றன.  ஆயினும் ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வானது சடுதியாக அதிகரித்த ஆண்டாக 1983 இனையும் அதற்குரிய பிரதான காரணியாக 1983 இல் பௌத்த சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் பின்புலத்துடன் இடம்பெற்ற ஆடிக்கலவரத்தையும் குறிப்பிடலாம்.  ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்ற நாடான கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற மாகாணங்களாக ஒன்ராரியோவும் கியூபெக்கும் இருக்கின்றன.  1983 வரை சில நூறுகளிலேயே தமிழர்களின் சனத்தொகை... Continue Reading →

கேரள டயரீசுக்கான எதிர்ப்பும் அருளினியனும் : சில அவதானங்கள்

இலங்கையின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து, 'கேரள டயரீஸ்' புத்தகத்தை கையளித்தேன் என்று ஒரு நிலைத்தகவலை அருளினியன் தனது முகநூலில் பதிவுசெய்திருப்பதனைக் காணக் கிடைத்தது,  அவரது முழுமையான நிலைத்தகவல் பின்வருமாறு அமைகின்றது, இலங்கையின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து, 'கேரள டயரீஸ்' புத்தகத்தை கையளித்தேன். சில சாதி, சைவ அமைப்புகளால், யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் புத்தக வெளியீட்டு நாளில் நான் எப்படியாக அலைக்கழிக்கப்பட்டேன் மிரட்டப்பட்டேன் என்பதையும், தற்போது சில சாதி, சைவ அமைப்புகள்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑