தாயகக் கனவு நோக்கிய ஒரு மாற்றத்துக்கான குரல்! – எஸ்.கே. விக்னேஸ்வரன்

2013 இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தபோது, இனி நான் வாழப்போகிற இந்த நாடு எப்படிப்பட்டது, இங்குள்ள மக்கள் என்ன செய்கிறார்கள், இலங்கையிலிருந்து இங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பவை பற்றிய எத்தகைய ஒரு விரிவான புரிதலும் என்னிடம் இருக்கவில்லை. தாயகம் பத்திரிகை, தாய்வீடு இதழ், காலம் சஞ்சிகை என்ற இந்த மூன்றையும் தவிர கனடாவில் இருந்து வெளிவரும் வேறெந்த இதழ்களையும் நான் அறிந்திருக்கவில்லை. மனவெளி நாடகக் குழுபற்றி அறிந்திருந்தேன்; தேடகம் அமைப்புப்... Continue Reading →

என். செல்வராஜாவின் நமக்கென்றொரு பெட்டகமும் நூலகச் சிந்தனைகளும்

செல்வராஜா அவர்கள் - பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமானது போல - எனக்கும் நூல் தேட்டம் செல்வராஜா என்றே அறிமுகமானவர்.  புலம்பெயர்ந்து கனடாவிற்கு வந்து நான் புத்தக வாசிப்பிற்கு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்வது என்பதே மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.   இப்பொழுது ரொரன்றோவில் தமிழ்ப் புத்தகக் கடையென்று ஒன்றுதான் இருக்கின்றது.  ஆனால் அந்தக் காலப்பகுதியில் 5 புத்தகக் கடைகள் இருந்தன.  இவற்றைத் தவிர தனிப்பட்ட முயற்சிகளால் புத்தகங்களை எடுத்து விற்பவர்களும் இருந்தனர். ... Continue Reading →

எங்கள் குமாரதேவன் ஐயா

ஈழத்தில் நான் வாழ்ந்த போர் சூழ்ந்த 1990 முதல் 97 வரையான காலப்பகுதியில் என் பதின்மங்களிலும் பதின்மங்களை ஒட்டிய பருவங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அன்றைய வாழ்வை, அதை எதிர்கொண்டவிதங்கள் பற்றிய நினைவுமீட்டல்களாக  யாழ் உதயன் பத்திரிகையின் வார இறுதிச் சிறப்பிதழான சூரியகாந்தியில் தொடரொன்றை 2014 ஆம் ஆண்டின் இறுதியில் எழுதிவந்தேன். சில வாரங்கள் மட்டுமே வந்த இந்தத் தொடர் அன்றைய யாழ்ப்பாணத்து உணவகங்கள், சிற்றுண்டிச் சாலை, தனியார்கல்வி நிலையங்கள் பற்றிய நினைவுகள், யாழ்ப்பாண வெளியேற்றத்துக்குப் பின்னரான தென்மராட்சி... Continue Reading →

ஈழக்கூத்தன் தாசீசியஸ்

இந்த நோக்கமும் அந்த அக்கறையின்பாற்பட்ட தொலைநோக்குமே தாசீசியஸை வழிநடத்தியிருக்கவேண்டும்.  பிபிசியில் பணியாற்றியதில் இருந்து பின்னர் ஐபிசியை உருவாக்குவதற்கான தேவை எதுவாக இருந்தது என்பது குறித்தும், பின்னர் ஐபிசியை உருவாக்கியது குறித்தும் கானா பிரபாவிற்கு வழங்கிய நேர்காணலில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.  அதுபோலவே தமிழ்க் குடில் என்கிற அவரது செயற்திட்டம் மிகவும் முன்னோடியானதென்பதை அதன் நோக்கங்களை வைத்துப் பார்க்கின்றபோது அறியமுடிகின்றது.  அதற்கப்பால் நாராய் நாராய் என்கிற நாடகப் பயணம் இன்னொரு முக்கியமான செயற்திட்டம்.  இந்த விடயங்களையெல்லாம் வெறும் தரவுகளாக இல்லாமல் எந்தச் சூழலில் எந்தப் பின்னணியில் எந்த நோக்கத்துக்காக இவையெல்லாம் உருவாகிய என்பதை இந்த நூலினூடாகவே அறியமுடிகின்றது.

ஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து…

பொருள்சார்ந்த, விடயம் சார்ந்த அறிவுச்சேகரங்களைத் தொகுக்கின்ற முயற்சிகள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்தே நடந்திருப்பதாக பிரித்தானியக் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகின்றது.  ஆயினும் என்சைக்ளோபீடியா என்பதற்கு வழங்கப்படுகின்ற இன்றைய அர்த்தத்துக்கு நெருக்கமானதாக, தொகுப்பு நூல் என்ற அர்த்தத்தில் என்சைக்ளோபீடியா என்ற சொல்லைப் பாவித்தவர் Paul Scalich என்கிற ஜெர்மனியராவார்.  இவர் எழுதி 1559 இல் வெளியான Encyclopaedia, or Knowledge of the World of Disciplines என்ற நூலே என்சைக்ளோபீடியாவுக்கான சமகால விளக்கத்துக்கு ஏற்ற அர்த்தத்திலும் உள்ளடக்கத்திலும் வெளியான முதல் நூலாகும்.   ஆயினும் என்சைக்ளோபீடியாவுக்கான உள்ளடக்கத்துடன் இதற்கு முன்னர் வெளியாகிய நூல்கள் அகராதி (Dictionary) என்ற பெயருடனேயே வெளியாகியிருக்கின்றன. 

பஞ்சலிங்கம் என்றொரு பெருநதி

இன்றைய கல்வி முறைகள், பாடசாலைகளின் நிலைமைகள், அவை எதிர்கொள்ளும் சவால்கள், மாணவர் - ஆசிரியர் உறவு நிலை என்பன குறித்து நண்பர்களுடன் உரையாடுவதும் அவை பற்றி வாசிப்பதும் எனக்கு விருப்பமான ஒன்று,  அத்தகைய உரையாடல்கள் எப்போதும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் கல்விகற்ற காலப்பகுதியில் அதிபராக இருந்த அ. பஞ்சலிங்கம் அவர்களைப் பற்றிப் பெருமதிப்புடன் நினைந்து போற்றுவதுடன் நிறைவுறுவது வழக்கம். 1991 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராக பஞ்சலிங்கம் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட காலப்பகுதியானது அரசியல்... Continue Reading →

கலைஞர் என்பது ஒரு சொல்லல்ல…

கலைஞர் எழுதிய வசனங்களில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் ராஜாராணி திரைப்படத்தில் அவர் எழுதி இடம்பெற்ற ”காவேரி தந்த தமிழகத்துப் புதுமணலில் கரையமைத்து சேர சோழ பாண்டி மன்னர் கோபுரத்துக் கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போரிட்டுக்கொண்டிருந்த காலமது...” என்று தொடங்குகின்ற வசனமாகும். கெடுக சிந்தை, கடிது இவள் துணிவே என்று தொடங்குகின்ற புறநானூற்றுப் பாடலுக்கு உரையாக சங்கத்தமிழ் என்கிற கலைஞரின் நூலில் இந்த வசனகவிதை இடம்பெற்றிருந்தது. நான் படித்து இன்புற்ற கலைஞரின் எழுத்து... Continue Reading →

தோழமை என்றொரு சொல்: ரொரன்றோவில் இடம்பெற்ற செழியன் நினைவு நாளை முன்வைத்து…

நேற்றுக் கலந்துகொண்ட செழியனின் நினைவு நிகழ்வு பற்றியதாகவே சிந்தனை இருக்கின்றது.  செழியன் என்ற ஆளுமையை ஒட்டுமொத்தமாக எப்படிப் பார்ப்பது? செழியன் எப்படியானவராக இருந்தார்? அவர் சமூகத்துடன் எப்படி உறவாடினார்? செழியன் போன்ற மனிதர்களை இந்த சமூகம் எப்படிக் கையாண்டிருக்கின்றது? என்பதாகச் சிந்தனைகள் செழியன் குறித்தும் இறந்துபோன இன்னும் சில நண்பர்கள், ஆளுமைகள் குறித்ததுமாக மாறி மாறி வந்துபோய்க்கொண்டே இருந்தன.   (1) செழியனின் இறப்பின் பின்னர் பலரும் எழுதிய குறிப்புகள் செழியனின் வீழ்ச்சியையும் தொட்டுச் சென்றனவாகவே இருந்தன. ... Continue Reading →

அரசியல் கிரிக்கெட் பகுதி 1

அப்போது எனக்கு பத்து வயதிருக்கும்.  பாடசாலையில் மதிய இடைவேளையில் பக்கத்து வகுப்பு மாணவர்களுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவது வழக்கம்.  வழமையான போட்டிகளின்போது ஸ்கோர் பதிவுகளைச் செய்கின்ற மாணவன் வராத நாளொன்றில் என்னை ஸ்கோர் பண்ணுமாறு கேட்டார்கள்.  நானும் கொப்பி ஒன்றின் பின்பக்கத்தில், விளையாடுகின்ற ஒவ்வொருவரது பெயரையும் எழுதி பந்துவீச்சில் கொடுத்த ஓட்டங்கள், துடுப்பாட்ட வீரர்கள் எடுத்துக்கொண்ட ஓட்டங்கள் என்று பதிவுசெய்தேன்.  ஒவ்வொரு வீரரும் எப்படி ஆட்டமிழந்தார்கள், யாரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்கள் என்கிற விபரங்களை எல்லாம் குறித்தேன்.  ஒவ்வொரு... Continue Reading →

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே!

நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிப் பழைய மாணவர்களில் ஒருவன்.   இலங்கையில் நடைமுறையில் உள்ள கல்விமுறையில் பாடசாலை அனுமதிகள் கிடைக்கும் விதம் பற்றியும் அது இலங்கையில் இருக்கக் கூடிய அனைத்துப் பாடசாலைகளின் செல்நெறியிலும் ஏற்படுத்தி இருக்கக்கூடிய தாக்கம் குறித்தும், சில பாடசாலைகள் மாத்திரம் வசதிகளும் சலுகைகளும் குவிக்கப்பட்டனவாய் அமைந்திருப்பது குறித்தும் எனக்கு விமர்சனங்கள் உண்டு.  குறிப்பாக சிறு கிராமங்களில் இருக்கின்ற பாடசாலைகள் கிட்டத்தட்ட கவனிப்பாரற்று மாணவர்கள் வரத்தற்று கைவிடப்படும் நிலைமையே காணப்படுகின்றது.  இந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் நிகழும்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑